முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விபத்தில் சிக்கி உயிரிழந்த 4 பேர் குடும்பத்துக்கு நிதி உதவி

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.27 - சேலம் மற்றும் வேலூர் மாவட்டங் களில் விபத்தில் சிக்கி உயிரிழந்த 4 பேர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை வருமாறு:_

சேலம் மாவட்டம், அம்மாப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த  ரங்கசாமி என்பவரின் மகன் சீனிவாசன், தனபால் என்பவரின் மகள்  நந்தினி மற்றும் செந்தில் குமாரின் மனைவி ஜானகி  ஆகியோர் 9.10.2013 அன்று  மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில்  பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியையும், 

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், மேற்கத்தியானுனூர் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் மகள் சிறுமி  ஜோதிகா 7.12.2013 அன்று  நெல் அடிக்கும் இயந்திரத்தின் பெல்டில் சிக்கி உயிரிழந்தாள்  என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். 

இந்த துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்