எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.27 - கிறிஸ்துமஸ் விடுமுறை தினமான புதன்கிழமையன்று வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு 25 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தந்தனர்.
பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் ஒரே நாளில் உயிரியல் பூங்காவின் வருவாய் ரூ.7 லட்சத்து 30 ஆயிரத்தைத் தாண்டியது. தமிழகம் மட்டுமல்லாமல் ஏராளமான வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்தோடு வந்து ரசிக்கும் இடமாக வண்டலூர் உயிரியல் பூங்கா திகழ்கிறது.
சுமார் 602 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகளும், விலங்களுகளும் உள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகையான புதன்கிழமை அரசு விடுமுறை என்பதால் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களைச் சேர்ந்த மக்கள் குடும்பத்தோடு வந்திருந்ததனர்.
இதுதவிர வெளி மாநில, மாவட்ட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிக அளவில் இருந்ததாக பூங்கா நிர்வாகிகள் தெரிவித்தனர். கொடிய வன விலங்குகளான சிங்கம், வெள்ளைப் புலி, வங்கப்புலி, சிறுத்தை மற்றும் கரடி ஆகியவற்றின் உலாவிடங்களில் பார்வையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
பறவைகள் பூங்காவுக்கு வரவேற்பு: வண்டலூர் உயிரியல் பூங்கா வளாகத்துக்குள் 1 ஹெக்டேர் பரப்பளவில் அண்மையில் அமைக்கப்பட்ட திறந்தவெளி பறவைகள் பூங்காவைப் காண்பதற்கு மக்கள் ஆர்வத்துடன் வந்தனர். இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:_ கடந்த மே மாதம் 5_ஆம் தேதியன்று அதிகபட்சமாக 30 ஆயிரத்துக்கும் மேலான பார்வையாளர்கள் பூங்காவுக்கு வருகை புரிந்தனர். அதன்பிறகு அதே மாதம் 19_ஆம் தேதியன்று 28 ஆயிரம் வந்தனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புதன்கிழமை அரசு விடுமுறை என்பதால் 25 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வந்துள்ளனர். இதனால் பூங்காவின் வருவாய் உயர்ந்துள்ளது.
பார்வையாளர்களைக் கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை பூங்கா நிர்வாகம் அறிமுகப்படுத்தி வருகிறது. அடைப்பிடங்களில் வைக்கப்பட்டுள்ள பறவைகளைத் தவிர பூங்கா வளாகத்துக்குள் உள்ள மரங்கள், புல்வெளிகளில் அதிகளவிலான பறவைகள் வசிக்கின்றன. இந்தப் பறவைகளையும் பார்வையாளர்கள் ரசிக்க வழிவகை செய்யும் வகையில் திறந்தவெளி பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டது.
பறவைகள், ஆமைகளுக்கு உணவளிக்கலாம்: ஜனவரி முதல் புதிய திட்டம்
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பறவைகள் மற்றும் ஆமைகளின் இருப்பிடங்களுக்குள் சென்று அவற்றுக்கு உணவளிக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஜனவரி 1_ஆம் தேதி முதல் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. பறவைகள் அல்லது விலங்கினங்களின் உணவு மற்றும் பராமரிப்பு செலவை ஏற்றுக் கொள்ளும் உயிரியல் ஆர்வலர்கள், பார்வையாளர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 11 வெள்ளைப் புலிகள், 4 சிறுத்தைகள், 5 வங்கப்புலிகள், 18 சிங்கங்கள், 762 பறவையினங்கள் உள்பட சுமார் 1,400_க்கும் அதிகமான உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
அவற்றின் உணவு மற்றும் பராமரிப்புக்காக நாளொன்றுக்கு சுமார் ரூ.60 ஆயிரத்துக்கும் அதிகமாக செலவிடப்படுகிறது. பூங்காவில் உள்ள யானை, புலி, சிங்கம், சிம்பன்ஸி குரங்கு, காண்டாமிருகம், சிறுத்தை, ஒட்டகச்சிவிங்கி, மலைப்பாம்பு உள்ளிட்ட உயிரினங்களுக்கு உணவுக்காக அதிக தொகை ஒதுக்கப்படுகிறது.
பாலூட்டி விலங்குகளில் குறைந்தபட்சமாக முள்ளம்பன்றிக்கு ஒரு நாள் உணவுக்கான செலவு ரூ.7.42 ஆகும். அதிகபட்சமாக யானைக்கு ரூ.769 வரை செலவிடப்படுகிறது. பறவைகளில், அந்தந்த இனங்களுக்குத் தகுந்தவாறு ரூ.0.68 முதல் ரூ.64 வரை தனித்தனியே செலவிடப்படுகிறது. இதைத் தவிர பாம்பு, முதலை, ஆமை உள்ளிட்ட உயிரினங்களுக்கும் தனித்தனியே ரூ.1.50 முதல் ரூ.305 வரை உணவுக்காக நாளொன்றுக்கு செலவாகிறது.
அதன் அடிப்படையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயிரினங்களின் உணவு மற்றும் பராமரிப்பு செலவை ஏற்றுக் கொள்ளும் அய்ண்ம்ஹப் ஹக்ர்ல்ற் ல்ழ்ர்ஞ்ழ்ஹம் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக உயிரியல் பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதில் பங்குபெறுவர்களுக்கு விதிமுறைகளின் அடிப்படையில் ஆமைகள் மற்றும் பறவைகளின் இருப்பிடங்களுக்குள் சென்று உணவளித்து அவற்றுடன் சில மணி நேரம் இருக்க அனுமதி தரப்பட உள்ளது.
இது குறித்து தலைமை வனக் காப்பாளரும் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநருமான ரெட்டி கூறியதாவது:
வண்டலூர் பூங்காவில் 700_க்கும் அதிகமான பறவையினங்கள் மற்றும் 30_க்கும் மேற்பட்ட ஆமை வகைகள் தனித்தனியே வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதன் இருப்பிடங்களுக்குள் சென்று அவற்றுடன் நேரம் ஒதுக்க வேண்டும்; அவற்றின் நடவடிக்கைகளை அருகில் இருந்து கவனிக்க வேண்டும்; அவற்றுக்கு உணவளிக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும்.
அத்தகைய ஆர்வலர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனை நடைமுறைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக ஆன்_லைன் மூலம் முன்பதிவு செய்யும் முறையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பார்வையாளர்கள் மற்றும் உயிரின ஆர்வலர்கள் தங்கள் பொருளாதார சக்திக்கு தகுந்தவாறு உயிரினங்களின் உணவு மற்றும் பராமரிப்பு செலவை ஏற்றுக் கொள்ளலாம். குறிப்பிட்ட தொகைதான் தரவேண்டும் என்ற வரையறை கிடையாது என்றார் அவர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.