முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மரணம் அடைந்த போலீசார் குடும்பங்களுக்கு நிதியுதவி

வெள்ளிக்கிழமை, 27 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச. 28 - மரணம் அடைந்த போலீசார் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்    நிதியுதவி செய்து உத்திரவிட்டுள்ளார். 

முதல்_அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:_

சேலம் மாநகர ஆயுதப்படையில் காவலராகப் பணி புரிந்து வந்த சிங்காரவேலு 22.10.2013 அன்று உடல்நலக் குறைவால் காலமானார்என்ற செய்தியையும்;

சேலம் மாவட்டம், ஆத்தூர் மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த .வெங்கடேசன் 26.10.2013 அன்று தனது இரு சக்கர வாகனத்தில் வீரகனூர் _ ஆத்தூர் பிராதானசாலையில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்என்ற செய்தியையும்;விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப்பணி புரிந்து வந்த ஏழுமலை  20.11.2013 அன்று மாரடைப்பால்காலமானார் என்ற செய்தியையும்;நாமக்கல் மாவட்டம், பரமத்தி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆடீநுவாளராகப்பணி புரிந்து வந்த .சுந்தரம்  25.11.2013 அன்று உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியையும்;

சென்னை பெருநகர காவல், சாத்தாங்காடு காவல் நிலையத்தில் தலைமைக்காவலராகப் பணி புரிந்து வந்த ரு.பார்த்திபன்  26.11.2013 அன்று உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியையும்;

விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணி புரிந்து வந்த நாகராஜ்  27.11.2013 அன்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியையும்;

விழுப்புரம் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணி புரிந்து வந்த மு.சுரேஷ்பாபு  27.11.2013 அன்று தனது இரு சக்கர வாகனத்தில் உளுந்தூர்பேட்டை ரயில்நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

சிவகங்கை நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சீமைச்சாமி  24.11.2013 அன்று நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 28.11.2013 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

விருதுநகர் மாவட்டம், ஆ.புதுப்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த சண்முகம்  2.12.2013 அன்று உடல்நலக் குறைவால் காவலமானார் என்ற செய்தியையும்;

நாமக்கல் மாவட்டம், வேலூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த மு.ஜெயராமன்  2.12.2013 அன்று உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியையும்;அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சுந்தரம், ஜெயராமன்; தலைமைக் காவலர்கள் வெங்கடேசன், ஏழுமலை, பார்த்திபன், சீமைச்சாமி, சண்முகம்; காவலர்கள் சிங்காரவேலு, நாகராஜ், சுரேஷ்பாபு, ஆகியோரின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறைந்த காவலர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்