முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசின் ஆயிரம் கோடி மதிபுள்ள பங்குகள் ஏலத்தில் விற்பனை

வெள்ளிக்கிழமை, 27 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.28 - தமிழக அரசின் ஆயிரம் கோடி மதிபுள்ள பங்குகளை ஏலத்தில் விற்பனை செய்யவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசின் நிதித்துறை முதன்மை செயலாளர் சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:_

மொத்தம் ரூபாய் 1,000.00 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டு கால பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை_கோட்டை அலுவலகத்தில் 31 டிசம்பர், 2013 அன்று நடத்தப்படும். போட்டி  ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து பிற்பகல் 12.00 மணிக்குள்ளாகவும் போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில்ள[Reserve Bank of India CoreBanking Solution(E-Kuber) System] நநீஙூசிடீஙின மின்னணு படிவத்தில்(உங்டீஷசிஙுச்டூடுஷ க்ச்ஙுஙிஹசி) 31 டிசம்பர், 2013 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்