முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ வாக்காளர்களுக்கு நன்றி

சனிக்கிழமை, 21 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,மே.21 - மதுரை வடக்கு தொகுதி வாக்காளர்களுக்கு ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ.,நேற்று நன்றி தெரிவித்து குறைகளை கேட்டறிந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட ஏ.கே.போஸ் அதிக வாக்குகள் பெற்று அமோக வெற்றிபெற்றார். இதனைத்தொடர்ந்து சென்னை சென்றுவிட்டு மதுரை திரும்பினார். வடக்கு தொகுதியில் உள்ள கோரிப்பாளையம்,ஜம்புரோபுரம் மார்க்கெட் பகுதியில் நேற்று மாலை ஏ.கே. போஸ் எம்.எல்.ஏ., வீடு வீடாக சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து தன்னை வெற்றிபெறச் செய்தமைக்கு நன்றி தெரிவித்தார். அப்போது பெண்கள் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அவர்களிடம் பேசிய ஏ.கே. போஸ் எம்.எல்.ஏ., குறைகளை கேட்டறிந்தார். பொதுமக்கள் கூறிய குறைகளை விரைவில் தீர்த்து வைப்பதாக உறுதி அளித்தார். 

ஏ.கே. போஸ் எம்.எல்.ஏ.வுடன் அனைத்து உலக எம்.ஜி.ஆர்.மன்ற மாநில துணைச்செயலாளர் எம்.எஸ். பாண்டியன், வடக்கு தொகுதி செயலாளர் எம்.ரவிச்சந்திரன், மாவட்ட மகளிரணி செயலாளர் பி.இந்திராணி, வடக்குப்பகுதி அவைத்தலைவர் என்.பாசுபாஸ், வட்டச்செயலாளர் ஏ. காஜா, பாகச் செயலாளர் செல்லூர் பாலமுருகன், பி.ஆர்.சி.வரதராஜன், தெய்வம் கணபதி, ஆர்.ஜோதி, பேரவை இணைச்செயலாளர் எஸ்.என். பாபு, இ.கம்யூ.ராதா, வ.கம்யூ. சரவணன், தே.மு.தி.க. மாவட்ட துணைச்செயலாளர் ஞானசேகரன் உள்ளிட்ட பலரும் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்