எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.4 - முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு "விஷம் போல் ஏறும் விலைவாசி" வரலாறு காணாத பணவீக்கம்"" ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதைத் தலையாய பணியாகக் கொண்டிருக்க வேண்டிய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, அதற்கு முற்றிலும் முரணான வகையில், விலைவாசியை உயர்த்த வழிவகுக்கும் பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றின் விலையை அடிக்கடி உயர்த்திக் கொண்டே செல்வது """"வேலியே பயிரை மேய்வது"" என்ற பழமொழிக்கேற்ப அமைந்துள்ளது.
1.12.2013 முதல் டீசல் விலையை லிட்டருக்கு 50 காசு எனவும்; 10.12.2013 முதல் சமையல் எரிவாயு உருளையின் விலையை 3 ரூபாய் 46 காசு எனவும்; 20.12.2013 முதல் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 41 காசு எனவும்; டீசலுக்கான விநியோகத் தொகையை லிட்டருக்கு 10 காசு எனவும்; 1.1.2014 முதல் மானியமில்லாத சமையல் எரிவாயுவின் உருளையை 220 ரூபாய் எனவும் உயர்த்தி, மக்களை தாங்க முடியாத சுமைக்கு ஆளாக்கிய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, எப்போதும் போல், சர்வதேசச் சந்தையில் பெட்ரோல் விலை உயர்வு, சர்வதேசப் பொருளாதார நிலை மற்றும் இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி ஆகியவற்றைச் சுட்டிக் காட்டி, இன்று (3.1.2014) நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 75 காசு எனவும், எண்ணெய் நிறுவனங்களுக்கு மாதாமாதம் டீசல் விலையை உயர்த்துவதற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் டீசல் விலையை லிட்டருக்கு 50 காசு எனவும் உயர்த்தியிருக்கிறது. இந்தியாவிலேயே இதுவரை நடந்திராத அளவுக்கு, கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் ஐந்தாவது முறையாக பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கை, ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிப்பதற்கு சமமாகும்.
சுதந்திர இந்தியாவில் இதுவரை எந்த மத்திய அரசும் செய்திராத அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அடிக்கடி உயர்த்தி விலைவாசி உயர்விற்கு வழிவகுத்த ‘பெருமை’ ஒன்பதரை ஆண்டு கால மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசையே சாரும்.
டீசல் என்பது நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான உயிர்நாடி. டீசல் விலை உயர்வு என்பது அனைத்து பொருட்களின் விலையுடன் பின்னிப் பிணைந்துள்ளது.
இதே போன்று பெட்ரோலும் சாதாரண ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தக் கூடிய ஒன்றாகும். தற்போது உயர்த்தப்பட்டுள்ள டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு காரணமாக, தனியார் வாகனங்களில் பயணிக்கும் மாணவ, மாணவியர்; அலுவலகங்களுக்குச் செல்வோர்; சுற்றுலாப் பயணிகள்; இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தும் ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோர் கூடுதல் சுமைக்கு ஆளாக்கப்படுவார்கள். பாசனத்திற்காக டீசல் பம்ப் செட்டுகளை பயன்படுத்தும் விவசாயிகளும், தொழில் முனைவோர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். இது தவிர, சரக்கு போக்குவரத்துச் செலவு அதிகரிப்பதால் காய்கறிகள், பழங்கள் உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் உயர்த்த இந்த டீசல் விலை உயர்வு வழி வகுக்கும். இவற்றிற்கெல்லாம் மேலாக, குறைந்த கட்டணத்தில் மக்களை ஏற்றிச் செல்லும் அரசுப் பேருந்துகளுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டு, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கடுமையான நிதிப் பற்றாக்குறையினைச் சந்திக்க நேரிடும்.
மத்திய அரசு டீசல் விலையை அடிக்கடி உயர்த்திக் கொண்டே செல்வதன் காரணமாக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பாதிக்கப்படும் என்றாலும், மக்கள் நலன் கருதி பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவதில்லை என்ற திடமான முடிவுடன் எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.
வெளிநாட்டுச் சந்தையில் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்ந்துவிட்டது என்று சொல்லி உள்நாட்டிலேயே கிடைக்கின்ற எண்ணெய்க்கும் அதே விலை நிர்ணயம் செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இந்திய நாட்டில் உள்ள எண்ணெய் வளங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும் மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். நான் ஏற்கெனவே பல முறை சுட்டிக் காட்டியபடி பெட்ரோலியப் பொருள்களின் விலை நிர்ணயக் கொள்கையில் உடனடி மாற்றத்தை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டு வர வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் அடிக்கடி பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்படுவது தவிர்க்கப்படும்.
கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குள் ஐந்து முறை என்ற அளவுக்கு பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை மத்திய அரசு உயர்த்துவது என்பது பொருளாதார மேம்பாட்டை சீரழிக்கின்ற ஒரு பிற்போக்கு நடவடிக்கை ஆகும். மத்திய அரசின் இந்த மக்கள் விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏற்கெனவே பல்வேறு சோதனைகளால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் பொதுமக்கள் மேலும் துன்பப்படாமல் இருக்க ஏதுவாக, இந்த விலை உயர்வையும், எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட விலை நிர்ணய அதிகாரத்தையும் மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
""""செவிடன் காதில் ஊதிய சங்கு"" என்ற பழமொழிக்கேற்ப மத்திய அரசு நடந்து கொள்ளுமேயானால், தங்களின் மனக் கொதிப்பினையும், உள்ளக் குமுறல்களையும் மக்கள் வருகின்ற மக்களவைத் தேர்தலில் நிச்சயம் வெளிப்படுத்துவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.