முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டிடம்

வெள்ளிக்கிழமை, 3 ஜனவரி 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.4 - வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டடங்களைக்  கட்டவும், ஒட்டுநர் உரிமம் வழங்குவதற்கான தேர்வுத்தளம் அமைக்கவும்   முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இதுகுறித்து  தமிழக  அரசு  விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:_   

பெருமளவில் பெருகி வரும் வாகனங்களினால் போக்குவரத்து துறை, தனது  செயல்பாட்டில் புதிய சவால்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, அனைத்து அலுவலகங்களையும் கணினிமயமாக்குதல், புதிய அலுவலகங்களை உருவாக்குதல், போக்குவரத்து அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டடம் கட்டுதல், ஒட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறைகளை பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் எளிதாக்குதல்  போன்ற பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா  தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

இந்த வகையில், பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்ற வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டடங்களைக்  கட்டவும், ஒட்டுநர் உரிமம் வழங்குவதற்கான தேர்வுத்தளம் அமைக்கவும்  முதல்வர் ஜெயலலிதா  தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது.  தற்போது போக்குவரத்துத் துறையில் உள்ள 137 அலுவலகங்களில் சொந்தக் கட்டடங்களில் 38 ஓட்டுநர் தேர்வுத் தளங்கள் இயங்கி வருகின்றன.  

மேலும் 4 அலுவலகங்களில்  தேர்வுத்தள கட்டுமானப் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன. 

சாலைப் பாதுகாப்பில் வாகன ஓட்டுநரின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதைக் கருத்தில் கொண்டும், சாலை விபத்துக்களை தவிர்க்கும் வண்ணமும்,  மொத்தமுள்ள 42 போக்குவரத்து ஓட்டுநர் தேர்வுத் தளங்களை கணினிமயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வுத் தளங்களாக மாற்ற தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது. முதற்கட்டமாக திருவண்ணாமலை, நாமக்கல் (வடக்கு), கடலூர்,  சேலம் (மேற்கு), திண்டுக்கல், திருச்சி(மேற்கு), கரூர், ஈரோடு, மதுரை (வடக்கு), விருதுநகர், கோயம்புத்தூர் (மையம்), திருநெல்வேலி, கிருஷ்ணகிரி மற்றும் சங்ககிரி ஆகிய 14 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களை கணினிமயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வுத் தளங்களாக உருவாக்க தமிழ்நாடு முதல்வர்  ஜெயலலிதா   உத்தரவிட்டுள்ளார்.   இதற்காக 10 கோடி  ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார். மீதமுள்ள ஓட்டுநர் தேர்வுத் தளங்களும் படிப்படியாக கணினிமயமாக்கப்படும்.

கணினிமயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வுத் தளங்கள் மூலம் ஓட்டுநர் உரிமத் தேர்வு நடத்தப்படும்போது, தேர்வு முடிவுகள் அனைத்தும் கணினி வரைப்படம் மூலம் துல்லியமாக பதிவு செய்யப்பட்டு, திறமையின் அடிப்படையில் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.  இதன் மூலம் திறமையான ஓட்டுநர்கள் உருவாக்கப்பட்டு, சாலைப் பாதுகாப்பில் தனிக்கவனம் செலுத்தப்பட்டு  வாகன விபத்துக்கள் பெருமளவில் குறைவதற்கு வழிவகை ஏற்படும்.  

இவ்வாறு தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்