எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஏப்.21 - ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசாவுடன் சேர்ந்து கூட்டு
சதி செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் ஜாமீன் மனுவை டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு நிராகரித்தது. அவரை உடனடியாக கைது செய்யவும் உத்தரவிட்டது. மேலும் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமாரின் ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டதோடு அவரையும் உடனடியாக கைது செய்ய சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி ஓ.பி. ஷைனி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ஆ.ராசா அடைக்கப்பட்டுள்ள திகார் சிறையில் கனிமொழியும், சரத்குமாரும் அடைக்கப்பட்டனர்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணையை தீவிரப்படுத்துமாறு சி.பி.ஐ.க்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. மேலும் சி.பி.ஐ. விசாரணையை கண்காணித்து வந்ததோடு கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணையை தீவிரப்படுத்தியது. ஊழல் குற்றச்சாட்டின் முக்கிய குற்றவாளியான முன்னாள் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா,பிரபல அரசியல் தரகர் நீரா ராடியா, ராசாவின் தனிச்செயலாளராக இருந்த சந்தோலியா,டி.பி. ரியால்டி பிரமோட்டர் பால்வா, ராசாவின் பினாமி சாதிக்பாட்சா (இவர் தற்கொலை செய்துகொண்டார்) கருணாநிதியின் மகளும் கலைஞர் டி.வி.யின் பங்குதாரருமான கனிமொழி எம்.பி., மற்றொரு பங்குதாரரான கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார், மத்திய தொலைதொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெகுரா மற்றும் மேலும் பலரிடம் சி.பி.ஐ.அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முதல் குற்றப்பத்திரிகையை சுப்ரீம்கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்தது. அதனையடுத்து சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவின்படி ஆ.ராசா, பல்வா, சித்தார்த்த பெகுரா,பல்வா உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் விசாரணையில் 2 ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் ஆதாயம் அடைந்த டி.பி.ரியால்டி நிறுவனத்தின் மூலம் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியிருப்பது தெரியவந்தது. இதனையொட்டி கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி, சரத்குமார் ஆகியோர்களிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. விசாரணையில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியதில் கனிமொழிக்கு முக்கிய பங்கு இருப்பது தெரியவந்தது. சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் கனிமொழி கூட்டு சதி செய்துள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதனையொட்டி கடந்த 6-ம் தேதி ஆஜராகும்படி சி.பி. ஐ. கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கனிமொழியும் சரத்குமாரும் கடந்த 6-ம் தேதி டெல்லி சி.பி.ஐ.கோர்ட்டில் ஆஜரானார்கள். கனிமொழி சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி ஆஜரானார். அப்போது அவர் வாதாடுகையில் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கனிமொழிக்கு எந்த தொடர்பும் இல்லை என்றார். சி.பி.ஐ. சார்பாக மூத்த வழக்கறிஞர் லலித் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் வாதாடுகையில் கலைஞர் டி.வி.க்கு ரூ. 200 கோடி கைமாறியதில் கனிமொழி முக்கி பங்கு வகித்துள்ளார். கலைஞர் டி.வியை கனிமொழிதான் முழுக்க முழுக்க தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்றும் முழு நிர்வாகத்தையும் அவர்தான் கவனித்து வந்தார் என்றும் கூறினார். அன்றைய தினமே கனிமொழியும் சரத்குமாரும் தங்களுக்கு ஜாமீன்கோரி மனுத்தாக்கல் செய்தனர். அதன் பிறகு இந்த வழக்கின் விசாரணை மே 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நாட்களில் சி.பி.ஐ. கோர்ட்டில் கனிமொழியும் சரத்குமாரும் ஆஜராகி வந்தனர். சென்னை வருமானவரி அலுவலகத்தில் கடந்த 12,13 ஆகிய தேதிகளில் கனிமொழி நேரில் ஆஜரான பின்னர் மே 13-ம் தேதி இரவு விமானம் மூலம் டெல்லி வந்தார். கனிமொழியின் ஜாமீன் மனுமீதான விசாரணையில் அவருக்கு ஜாமீன் வழங்கலாமா என்பது குறித்து கடந்த 14-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீர்ப்பை நீதிபதி ஷைனி 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்நிலையில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழி கடந்த வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ஆஜரானார். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் தனக்கு ஓய்வு வேண்டும் என்று நீதிபதி ஷைனியிடம் கனிமொழி முறையிட்டார். இதையடுத்து நீதிபதி ஷைனி அனுமதி வழங்கவே கனிமொழி நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார். ஓய்வு எடுத்த பின் அன்று மதியம் 2 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார். மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவும் சரத்குமாரும் ஆஜராகியிருந்தனர். கனிமொழியுடன் அவரின் கணவர் அரவிந்தன் உடனிந்தார்.
இந்தநிலையில் கனிமொழி மற்றும் சரத்குமார் ஆகியோர்களின் ஜாமீன் மனு நேற்று சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது கனிமொழி மற்றும் சரத்குமார் ஆகியோர்களின் ஜாமீன் மனுவை நீதிபதி ஷைனி நிராகரித்துவிட்டார். மேலும் அவர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்யும்படியும் உத்தரவிட்டார். இரண்டு பேர்களின் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்த இரண்டு பேர்களையும் உடனிடயாக காவலில் வைக்கும்படி உத்தரவிடுகிறேன் என்று நீதிபதி ஷைனி கூறினார். வழக்கு விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வருவதால் கனிமொழியையும் சரத்குமாரையும் இன்று காலை 10 மணிக்கு ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதி ஷைனி கூறினார்.கனிமொழியும் சரத்குமாரும் கைது செய்யப்பட்டு டெல்லியில் மிகுந்த பாதுகாப்பு உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தன்வினை தன்னைச் சுடும்
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் கிரானைட் சுரங்க ஊழலை கண்டுபிடித்து தினபூமி நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக மு.க.அழகிரியின் தூண்டுதலுடன் தினபூமி ஆசிரியர் மீது பொய்வழக்கு தொடர்ந்து திருடர்களைப் போல நள்ளிரவில் வீட்டு காம்பவுண்டு சுவர் மீது ஏறிக்குதித்து, அத்துமீறி வீட்டிற்குள் புகுந்து தினபூமி ஆசிரியரை கைது செய்து சிறைக்கு அனுப்பியது கருணாநிதியின் போலீஸ்.
இப்படி தி.மு.க. ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத்தை பறித்து, பத்திரிகையாளர்கள் மீதே பொய்வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பியதன் பலனை கருணாநிதி குடும்பம் தற்போது அனுபவித்துக்கொண்டு இருக்கிறது. கலைஞர் தொலைக்காட்சிக்கு லஞ்ச பணம் கைமாறிய விவகாரத்தில் கருணாநிதி மகள் கனிமொழி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் முடியும்வரை கனிமொழியின் தந்தை முதல் அமைச்சராக இருந்துள்ளார். அண்ணன் துணை முதல்வராக இருந்துள்ளார். மற்றொரு அண்ணன் தற்போதும் மத்திய அமைச்சராக உள்ளார். இவர்களால்கூட கனிமொழி சிறைக்கு செல்வதை தடுத்து நிறுத்த முடியவில்லை. விரைவில் கருணாநிதி உள்பட கருணாநிதியின் குடும்பத்தினருக்கும் கனிமொழிக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் கருணாநிதி குடும்பம் ஆடிய ஆட்டம் கொஞ்சநஞ்சமல்ல. தன்வினை தன்னைச் சுடும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.