முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். - ராஜஸ்தான் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, மே. 22 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் மும்பையில் நடைபெ ற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத் தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி தொடரில் முன்னிலை பெற்று உள்ளது. 

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி தரப்பில், துவக்க வீரர் வாட்ச ன் ஆல்ரவுண்டிங் திறமையை வெளிப்படுத்தினார். அவர் பேட்டிங்கி ன் போது, அதிரடியாக ஆடி அரை சதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். டிராவிட் அவருக்குப் பக்கபலமாக ஆடினார். 

முன்னதாக பெளலிங்கின் போது, வாட்சன் நன்கு பந்து வீசி 3 முக்கி ய விக்கெட்டுகளை வீழ்த்தினார். வார்னே மற்றும் ஏ. சிங் ஆகியோர் அவருக்கு ஆதரவாக பந்து வீசினர். 

ஐ.பி.எல். டி - 20 போட்டியில், மும்பையில் உள்ள வாங்க்டே அரங்க த்தில் 66 - வது லீக் ஆட்டம் நடந்தது. இதில் கேப்டன் டெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கேப்டன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. 

முன்னதாக இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தி யன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி சார்பில், சுமன் மற்றும் டெண்டுல்கர் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

முதலில் களமிறங்கிய மும்பை அணி இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 133 ரன்னை எடுத்தது. அந்த அணி சார் பில், ஒரு வீரர் அரை சதமும், ஒரு வீரர் கால் சதமும் அடித்தனர். 

மும்பை அணியின்  மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரோகித் சர்மா அதிகபட்சமாக, 47 பந்தில் 58 ரன்னை எடுத்தார். இதில் 5 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் வார்னே வீசிய பந்தில் கீப்பர் ஷாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

அடுத்தபடியாக, கேப்டன டெண்டுல்கர் 35 பந்தில் 31 ரன்னை எடுத் தார். இதில் 3 பவுண்டரி அடக்கம். தவிர, பொல்லார்டு 18 பந்தில் 20 ரன்னையும், பிராங்ளின் 11 ரன்னையும் எடுத்தனர். 

ராஜஸ்தான் அணி சார்பில், வாட்சன் 19 ரன்னைக் கொடுத்து 3 விக்கெ ட் எடுத்தார். தவிர, கேப்டன் வார்னே மற்றும் ஏ. சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

ராஜஸ்தான் அணி 134 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிய இலக்கை மும்பை அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 13.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 134 ரன் எடுத்தது. 

இதனால் ராஜஸ்தான் அணி மும்பையில் நடைபெற்ற இந்த லீக் ஆட்டத்தில், 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 வெற்றிப் புள்ளிகள் கிடைத்தது. 

இதில் மும்பை அணி தோல்வி அடைந்ததால் அந்த அணியின் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்டது. 

ராஜஸ்தான் அணி தரப்பில், துவக்க வீரர் வாட்சன் 47 பந்தில் 89 ரன் னை எடுத்தார். இதில் 9 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் அடக்கம்.டிராவிட் 32 பந்தில் 42 ரன்னை எடுத்தார். இதில் 6 பவுண்டரி அடக்கம். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக வாட்சன் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்