முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓ.பன்னீர்செல்வம் அவை முன்னவராக நியமனம்

திங்கட்கிழமை, 23 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.- 23 ​- அவை முன்னவராக ஓ.பன்னீர்செல்வமும், தலைமை அரசு கொறடாவாக பி.மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்று சட்டமன்ற செயலாளர் எ.எம்.பி. ஜமாலூதீன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சட்டமன்ற செயலாளர் ஜமாலூதீன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழக கவர்னர்  சுர்ஜித் சிங் பர்னாலா  தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடரை இன்று(திங்கட்கிழமை) பகல் 12.30 மணிக்கு தலைமை செயலகவளாகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அப்போது தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள செ.கு.  தமிழரசன் முன்னிலையில்  புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு உறுதிமொழி எடுக்க வேண்டும்.
பதவி ஏற்பு உறுதி மொழி எடுத்துக்கொள்ள வரும் போது எம்.எல்.ஏ.க்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழையும் தவறாமல் கொண்டு வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும்  தமிழக சட்டபேரவையின் அவை முன்னவராக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.  மேலும் அரசு தலைமை கொறடாவாக முன்னாள் அமைச்சரும், சங்கரபுரம் தொகுதி உறுப்பினர் பி.மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கண்ட தகவலை சட்டமன்ற செயலாளர் எ.எம்.பி.ஜமாலுதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்