முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலூர் அருகே அரசுபஸ் கவிழ்ந்து கண்டக்டர் பலி; 14 பேர் படுகாயம்

திங்கட்கிழமை, 23 மே 2011      தமிழகம்
Image Unavailable

மேலூர்,மே.- 23 - மேலூர் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததால் கண்டக்டர் நசுங்கி பலியானார். 14 பயணிகள் படுகாயம் அடைந்தார். திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சியை நோக்கி அரசு பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. இந்த பஸ் நேற்று காலை மதுரை வழியாக திருச்சிக்கு சென்று கொண்டு இருந்தது. பஸ்சை மணப்பாறையை சேர்ந்த டிரைவர் நீதிராஜன்(வயது45), என்பவர் ஓட்டினார். அருகில் திருச்சியை சேர்ந்த கண்டக்டர் வேணுகோபால் (45), அமர்ந்திருந்தார்.மேலூர் அருகே தும்பைப்பட்டி பக்கம் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி பஸ் ஒரு மின் கம்பத்தில் மோதி ரோட்டின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழந்தது. இதில் கண்டக்டர் வேணுகோபால் அதே இடத்தில் பலியானார். 20 -க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பஸ்சில் சிக்கி இருந்த பயணிகளை மீட்டார். பின்னர் காயம் அடைந்திருந்தவர்களை மேலூர் மற்றும் மதுரை அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். இதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்து குறித்து மேலூர் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்