முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் மரியம் பிச்சை மரணம்: முதல்வர் இரங்கல்

திங்கட்கிழமை, 23 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.24 - தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மரியம் பிச்சை நேற்று நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தார்.  அவரை இழந்துவாடும் அன்னாரது குடும்பத்தாருக்கு எனது ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாநகர் மாவட்ட முன்னாள் செயலாளரும், சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான அன்பு சகோதரர் மரியம் பிச்சை நேற்று காலை எதிர்பாராதவிதமாக நடைபெற்ற சாலை விபத்தில் அகால மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியுற்றேன்.

கட்சியின் மீதும், கட்சி தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு ஆரம்ப காலம் முதல் கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்த அன்பு சகோதரர் மரியம் பிச்சை பொன்மலை பகுதி செயலாளராகவும், அரியமங்கலம் மண்டல குழுத்தலைவவாகவும் மூன்று முறை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற உறுப்பினராகவும் திற்பட ப ணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆற்றல் படைத்த கட்சி செயல்வீரர் மரியம் பிச்சையின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.

அன்பு சகோதரர் மரியம் பிச்சையை இழந்து  ஆற்றொணாத துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா  இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்