முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யமுனை நதியில் படகு கவிழ்ந்து 10 பேர் பலி

திங்கட்கிழமை, 23 மே 2011      இந்தியா
Image Unavailable

அலகாபாத். மே. ​24- திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக படகு ஒன்றில் சென்று  கொண்டிருந்த போது படகு ஒன்று யமுனை நதியில் மூழ்கியதால் அதில் பயணம் செய்த 10 பேர் நீரிழ் மூழ்கி பலியானார்கள். உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்திலிருந்து  50 கி.மீ. தொலைவில் உள்ள தேங்குபூர் என்ற கிரமத்தில் இருந்து  11 பேர் ஒரு  திருமண நிகழ்ச்சியல் கலந்து கொள்வதற்காக  ஒரு படகில்  சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மண்டா என்ற இடத்திற்கு அருகே யமுனை நதியில் அந்த படகு கவிழ்ந்து விழுந்தது. இதில் 10 பேர் நீரிழ் மூழ்கி பலியானார்கள். படகு சென்று கொண்டிருந்த போது பலமான காற்று வீசியதால் அந்த படகு கவிழ்ந்து விபத்திற்கு உள்ளாகியிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். படகோட்டியும் படகில் பயணம் செய்த மேலும் ஒரு கிராமவாசியும் மட்டும் நீந்தி கரை சேர்ந்தனர். சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் கிராம மக்களும் மீட்பு குழுவினரும் விரைந்து வந்து தேடுதல்  பணயில் ஈடுபட்டனர். இதுவரை 2 சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. மேலும் சடலங்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீசார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்