முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங் .2 ஆண்டு கால ஆட்சியில் ஊழலை தவிர எந்த சாதனையும் இல்லை சுப்பிரமணிய சுவாமி

புதன்கிழமை, 25 மே 2011      இந்தியா
Image Unavailable

வேலூர், மே. - 25 - கடந்த 2 ஆண்டு காலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் ஊழலை தவிர வேறு எந்த சாதனையும் செய்யப்படவில்லை என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி வேலூரில் கூறினார்.
வேலூர் அடுத்த அரியூர் மலைக்கோடி நாராயணி வித்யாலயாவில் கிராம பூசாரிகள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் அகில இந்திய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி கலந்துகொண்டு பேசினார். பின்னர் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது- நடந்து முடிந்த தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சி மக்களுக்கு நல்லாட்சியை தர வேண்டும். தமிழகத்தில் சிதம்பரம், திருச்செந்தூர் உள்பட 42 ஆயிரம் கோவில்களை தமிழக அரசு ஏற்றுள்ளது. இதன் நிர்வாகத்தை கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி அரசு ஒப்படைக்காவிட்டால் போராட்டங்கள் நடத்தப் படும். கடந்த 2 ஆண்டு காலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி ஆட்சியில் எந்த சாதனையையும் செய்யவில்லை. ஊழல் ஒன்று தான் அவர்கள் செய்த சாதனை. இவ்வாறு சுப்பிரமணிய சுவாமி கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்