முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாதுகாப்பு படையினருக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளிக்கப்படும்: ப.சிதம்பரம்

வியாழக்கிழமை, 26 மே 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,மே.- 26 - எல்லைப் பாதுகாப்பு படையினர்களுக்கு சிறப்பான பயிற்சியும் நவீன ஆயுதங்களும் வழங்கப்படுவதோடு அவர்கள் பணிபுரியும் இடங்களில் தேவையான வசதிகளையும் செய்துதரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
எல்லைப்பாதுகாப்பு படையினர் சார்பாக டெல்லியில் 5 நாள் கண்காட்சி நேற்று ஆரம்பமானது. இந்த கண்காட்சியை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் எல்லைப்பாதுகாப்பு படையினர்களுக்கு சிறந்த முறையில் கடும் பயிற்சி அளிக்கப்படும் என்றார். அவர்களுக்கு நவீன தொழில்நுட்ப வசதியுடைய ஆயதங்கள் மற்றும் தளவாடங்கள் வழங்கப்படும். எல்லைப்பாதுகாப்பு படையினர் கடும் குளிர்பகுதியில் பணியாற்றி வருகிறார்கள். இந்த குளிரை தாங்கும் அளவுக்கு அவர்கள் தங்கும் இடங்கள் மற்றும் பயிற்சி இடங்களில் வசதிகள் செய்து கொடுக்கப்படும். நாட்டின் எல்லையை பாதுகாப்பதில் இதுவரை ஆயிரத்து 678 எல்லைப்பாதுகாப்பு படையினர் பலியாகி உள்ளனர் என்றும் ப.சிதம்பரம் வருத்தத்துடன் கூறினார். கண்காட்சியில் இணை ராணுவத்தினர்,பெண்கள், பள்ளி ஆசிரியர்கள் உருவாக்கிய 112 ஓவியங்களும் 200-க்கும் மேற்பட்ட சிலைகளும் இடம் பெற்றிருந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்