முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து தர முதல்வர் நிதீஷ்குமார் கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2011      இந்தியா
Image Unavailable

பாட்னா. மே.- 29 - பீகாருக்கு சிறப்பு அந்தஸர்து  தர வேண்டும் என்று மத்திய அருசக்கு அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் கோரிக்கை விடுத்துள்ளார். பாட்னாவில் முதல்வர் நிதீஷ் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் பீகார் மாநிலத்தில் தனியார் முதலீடுகளை ஈர்க்க தங்களது மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அளிக்க வேண்டும் ஒன்று புதிய கோரிக்கையை எழுப்பியுள்ளார்.
இந்த கோரிக்கையை மத்திய அரசிடம் எடுத்துக்கூற இருப்பதாக அவர் தெரிவித்தார்.
பீகார் மாநில வளர்ச்சிக்கு இந்த சிறப்பு அந்தஸ்து  உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மாநிலத்தின் வளர்ச்சிக்கு மேலும் மேலும் முதலீடுகள் தேவைப்படுகிறது என்றும்  முதலீடுகள் குவிந்தால் அரசாங்கத்தின் சுமைகள் குறையும்  என்றும் அவர் குறிப்பிட்டார்.
வருகிற திங்கள் கிழமை மத்திய திட்டக்கமிஷனின் பிராந்திய மாநாடு பாட்னாவில் நடக்க இருக்கிறது. அந்த மாநாட்டில் இந்த கோரிக்கைகளை முன் வைக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்