முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூயார்க் கட்டிட விபத்து: பலி 7ஆக உயர்வு

வெள்ளிக்கிழமை, 14 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், மார்ச்.15 - அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான நியூயார்க்கில் எரிவாயுக் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு அடுக்கு மாடிக் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.

 இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. 65 பேர் காயமடைந்துள்ளனர். 9 பேர் காணாமல் போய் உள்ளனர். தீயை அணைக்க வீரர்கள் கடுமையாக போராடினர். இதனால் அந்த  இடம் போர்க்களமாக காட்சி அளித்தது. இந்த விபத்தில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த விபத்து நியூயார்க் கடந்த 2001 ம் ஆண்டு தீவிரவாதிகள் நிகழ்த்திய இரட்டைக் கோபுர தாக்குதலை நினைவு படுத்துவதாக அமைந்தது. இச்சம்பவத்தை நேரில் பார்த்த சிலர், அது பூகம்பம் ஏற்படுவது போன்ற தாக்கத்தை உண்டாக்கியதாகத் தெரிவித்தனர். இவ்விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள நியூயார்க் மேயர் பில் டி பிளேஸியோ, இது மிகவும் மோசமான விபத்து கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்