முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரியாவில் தீவிரவாதிகள் சுட்டதில் 70 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 14 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

சுனோ, மார்ச்15 - நைஜீரியாவில் தீவிரவாதிகள் சுட்டதில் 70 பேர் பலியானார்கள். நைஜீரியாவில் போகோஹாரம் என்ற தீவிரவாத அமைப்பினர் அரசுக்கு எதிரான வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பாவி பொது மக்களை கொன்று குவித்து வருகின்றனர். கட்சினா மாகாணத்தில்  கிராமத்தில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் கிராம மக்களை சுட்டனர். வீடுகளுக்கு தீ வைத்தனர். இதில் 70 பேர் உயிரிழந்தனர். இதை கட்சினா எம்.பி. அப்பாஸ் தெரிவித்தார். 

 இதில் 30 பேர் மட்டுமே இறந்ததாக போலீஸ் அதிகாரி ஹர்டி முகமது தெரிவி்த்தார். இந்த தாக்குதலில் போஹோஹாரம் தீவிரவாதிகள் சம்பந்தப்படவில்லை என்றும் அவர் தெரிவி்த்துள்ளார்.

      

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்