முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்கிஸ்தானில் இரட்டை குண்டு வெடித்து 21 பேர் பலி

சனிக்கிழமை, 15 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

குவெட்டா, மார்ச்.16 - பாகிஸ்தானில் பெஷாவர் மற்றும் குவெட்டா நகரங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. 

பெஷாவரில் உள்ள சிர்பாந்த் என்ற இடத்தில் பட்டா தல் பஜார் என்ற சந்தை பகுதியில் தற்கொலை படையினர் போலீஸ் வாகனத்தை குறிவைத்து நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் பலியாயினர். சுமார் 32க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். அதே போல் குவெட்டா நகரில் சுமார் 10 கிலோ எடையுள்ள வெடிபொருட்களுடன் வந்த தற்கொலை படை தீவிரவாதிகளின் வாகனம் ஒன்று அவ்வழியாக சென்ற பாதுகாப்பு படை வாகனத்தின் அருகே வெடிக்கச்செய்யப்பட்டதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் பலியாயினர் மேலும் 31 பேர் படுகாயமடைந்தனர்.

தலிபான்களோடு பேச்சு வார்த்தை நடத்த முயர்ச்சி மேற்கொண்டுள்ள நிலையில் இந்த தாக்குதல்கள் பின்னடைவை ஏற்படுத்த சதி என்ன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல்களை தலிபான்கள் நடத்தியிருக்கலாம் என பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனல் தெரிவித்துள்ளது.

இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 21 பேர் பலியான சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்