எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோலாலம்பூர்,மார்ச்.17 - மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் கூறியபோது, மாயமான விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன, ஆனால் கடத்தல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு கடந்த சனிக்கிழமை அதிகாலை 12.40 மணிக்கு 237 பயணிகள், விமானி, துணை விமானி உள்பட 12 ஊழியர்களுடன் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது.
அதிகாலை 1.20 மணி அளவில் கோலாலம்பூர் விமான நிலைய கட்டுப்பாட்டு அறை ரேடாரில் இருந்து விமானம் மாயமாய் மறைந்தது. அந்த விமானத்தில் 152 சீனர்கள், 5 இந்தியர்கள் உள்பட 14 நாடுகளைச் சேர்ந்தோர் பயணம் செய்தனர்.
மாயமான பிறகு 7 மணி நேரம் பறந்தது
கடைசி ரேடார் பதிவின்படி தென்சீனக் கடல் பகுதியில் விமானத்தை தேடுதல் பணி நடை பெற்றது. அதன்பின்னர் அந்தமான் கடல் பகுதி வரைக்கும் தேடுதல் பணி விரிவுபடுத்தப்பட்டது. பல் வேறு நாடுகளைச் சேர்ந்த 58 விமானங்கள், 43 கப்பல்கள் ஒரு வாரமாக தேடியும் விமானம் குறித்து இதுவரை எந்தத் தடய மும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் விமானம் மாயமாகி 7 மணி நேரத்துக்குப் பிறகு கடந்த சனிக்கிழமை காலை 8.11 மணிக்கு செயற்கைக்கோளில் பதிவாகியுள்ளது இப்போது தெரியவந்துள்ளது. எனவே விமானத்தை நன்கு கையாளத் தெரிந்தவர்கள் அதனை கடத்தியிருக்கக்கூடும் என்று சந்தேகம் வலுத்துள்ளது.
மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் கோலாலம்பூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மலேசியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் விமானம் பறந்தபோது அதன் தகவல் தொடர்புகள் அனைத்தும் அணைக்கப்பட்டுள்ளன. விமானம் வழக்கமான பாதையில் செல்லாமல் மேற்காக திரும்பி பின்னர் வடமேற்கு திசையில் பறந்திருப்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.
கடந்த சனிக்கிழமை காலை 8.11 மணிக்கு அந்த விமானம் செயற்கைக்கோள் ஒன்றில் பதிவாகியுள்ளது. இந்த நடவடிக் கைகள் அனைத்தும் விமானத்தில் இருந்த யாரோ ஒருவர் அல்லது ஒரு குழுவினரின் திட்டமிட்ட செயல் என்று தெரிகிறது. விமானம் எவ்வளவு தொலைவு பறந்திருக்க முடியும் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அண்மையில் கிடைத்த செயற்கைக்கோள் பதிவுகளின்படி கஜகஸ்தான், துர்க்மெனிஸ் தான் எல்லை முதல் தாய்லாந்தின் வடக்கு எல்லை வரையி லான பகுதியில் விமானம் பறந்திருக்கக்கூடும் அல்லது இந்தோனே ஷியா முதல் இந்திய பெருங் கடல் தென்பகுதி வரை பறந்திருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள் தகவல்கள் மூலம் விசாரணை புதிய கோணத்துக்கு திரும்பியுள்ளது. விமான ஊழியர்கள் மற்றும் பயணிகள் குறித்து மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இதுவரை உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை.
என்ன காரணத்தினால் விமானம் திசை மாறி பறந்தது என்பது குறித்து மலேசிய அதிகாரி கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இப்போது தென்சீனக் கடலில் தேடுதல் பணியை நிறுத்தி விட்டோம். எங்களது தேடுதல் பணியின் எல்லைகளை மாற்றியுள்ளோம். ரேடார் பதிவு உள்ளிட்ட முக்கிய தகவல்களையும் கேட்டுள்ளோம் என்று மலேசிய பிரதமர் தெரிவித்தார்.
பிரதமரின் பேட்டி நிறைவடை வதற்கு முன்பே விமானி ஜகாரி அகமது ஷாவின் (53) கோலாலம்பூர் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். மேலும் துணை விமானி பாரிக் அப்துல் ஹமீதுவின் (27) வீட்டில் இருந்து அவரது சகோதரர்கள் நீண்டநாள் வெளியூர் பயணத்துக்கு செல்வதுபோல் காரில் புறப்பட்டனர். அவர்களும் விசாரணைக்கு அழைக்கப்பட்டி ருக்கலாம் என்று தெரிகிறது.
செயற்கைக்கோள் பதிவு தகவலின்படி அந்தமான் கடல் பகுதியில் தீவிர தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் கூறியபோது, மாயமான விமானத்தை தேடுவது வைக்கோலில் குண்டூசியை தேடுவது போன்றது, எனினும் தொடர்ந்து தேடுதல் பணி நடை பெறுகிறது என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.