முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து: 7 பேர் சாவு

திங்கட்கிழமை, 17 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

காத்மாண்டு, மார்ச்  18 - நேபாளத்தில் கேவிலுக்குச் சென்ற பக்தர்களின் ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் கல்யாங் மாவட்டத்தில் உள்ள பக்தர்கள்  சிரிஷேகோட் பகுதியில் உள்ள அகலாதேவி கோவிலுக்கு ஜீப்பில் சென்றுக் கொண்டிருந்தனர். அவர்கள் சென்று கொண்டிருந்த ஜீப் சியாங்ஜா மாவட்டத்தில் செனிதும்கா மலைப் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது சாலையின் ஓரத்தில் இருந்த 200 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஜீப்பில் பயணம் செய்த 7 பேர் உயிரிழந்தனர் . காயமடைந்த மற்ற ஏழு பேர்  உடனடியைாக மீட்கப்பட்டு அருகில் உள்ள பல்பா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்