முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரத்தன் டாடாவுக்கு சிங்கப்பூர் பல்கலை., கௌரவப் பட்டம்

புதன்கிழமை, 19 மார்ச் 2014      இந்தியா
Image Unavailable

 

சிங்கப்பூர், மார்ச் 19 - இந்தியிவின் முன்னணி தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு சிங்கப்பூர் மேலாண்மைப் பல்கலைக்கழகம் கௌரவ முனைவர் பட்டம் வழங்கி பாராட்டியது.

இதற்காக சிங்கப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்ச்சியில், ரத்தன் டாடாவுக்கு அந்த நாட்டின் கல்வித்துறை அமைச்சர் ஹெங் ஸவீட் கியத் மற்றும் சிங்கப்பூர் மேலாண்மை பல்கலைக்கழகத்தின் தலைவர் ஆர்நௌட்டி மெயர் ஆகியோர் மேலாண்மை முனைவர் பட்டத்தினை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். சிங்கப்பூருக்கான இந்திய தூதர் எம்.எஸ்.விஜய் தாக்கூர் சிங்கும் அதில் கலந்து கொணடார். இந்நிகழ்ச்சியில் ஏற்புரை நிகழ்த்திய ரத்தன் டாடா இவ்விருதினை பெறுவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்