எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நியூயார்க்,மார்ச்.20 - மாயமான மலேசிய விமானம் நடுவானில் வெடித்துச் சிதறவில்லை, தரையில் விழுந்து நொறுங்கவும் இல்லை, கடலிலும் மூழ்க வில்லை என்று ஐ.நா. சபை சார்ந்த சி.டி.பி.டி.ஓ. அமைப்பு திட்ட வட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அணுகுண்டு சோதனை தடை உடன்பாடு அமைப்பு (சி.டி.பி.டி.ஓ.), அணுகுண்டு சோதனைகளைக் கண்டறிவதற்காக உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதி நவீன கண்காணிப்புக் கருவிகளை நிறுவியுள்ளது.
நிலத்திலோ, கடலிலோ, வான் பரப்பிலோ அதிர்வுகள் எழுந்தால் இந்தக் கருவிகளில் பதிவாகிவிடும். போயிங் 777 போன்ற பெரிய விமானங்கள் வான்பரப்பில் வெடித்துச் சிதறினாலோ, தரையில் விழுந்து நொறுங்கினோ, கடலில் விழுந்தாலோ அந்த அதிர்வலைகள் நிச்சயமாக சி.டி.பி.டி.ஓ. கருவிகளில் பதிவாகியிருக்க வேண்டும்.
ஆனால் அதுபோன்ற எந்த அதிர்வலைகளும் கண்காணிப்புக் கருவிகளில் பதிவாகவில்லை. எனவே மாயமான மலேசிய விமானத்துக்கு அசம்பாவிதம் நேர்ந்திருக்க வாய்ப்பு இல்லை என்று அந்த அமைப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சி.டி.பி.டி.ஓ. செயல் இயக்குநர் லாசினோ ஜெர்போ, நியூயார்க்கில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்பராசவுன்ட், இன்பராசோனிக் சென்சார்கள் மூலம் பூமியை முழுவதுமாக கண்காணித்து வருகிறோம், எங்களது கண்காணிப்புக் கருவிகளில் எதுவும் பதிவாகவில்லை, எனவே ஐ.நா. உறுப்பு நாடுகள் அனைத்தும் தங்களது செயற்கைக்கோள்கள், கண்காணிப்பு கருவிகள் மூலம் விமானத்தை தேடுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம் இவ்வாறு அவர் கூறினார். மாயமான மலேசிய விமானத்தில் மொத்தம் 239 பேர் இருந்தனர். இதில் 153 பேர் சீனர்கள். எனவே விமானத்தை தேடும் பணியில் சீனா அதிக அக்கறை காட்டி வருகிறது. தற்போது 21 செயற்கைக் கோள்கள் உதவியுடன் சீன விண்வெளித் துறை விஞ்ஞானிகள் விமானத்தைத் தேடி வரு கின்றனர். சந்தேகத்துக்குரிய சீன எல்லைக்குள்பட்ட நிலப்பரப்புகள், கடல் பகுதிகளிலும் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. விமானத்தில் பயணம் செய்த 153 பயணிகள் குறித்தும் சீன போலீஸார் விசாரணை நடத்தி யுள்ளனர். ஆனால் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கோலாலம்பூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த மலேசியாவுக்கான சீன தூதர் ஹூனாங் ஹூகாங், சீனப் பயணிகள் விமானத்தைக் கடத்தியிருக்க வாய்ப்பில்லை என்று உறுதியாகத் தெரிவித்தார்.
மலேசிய ராணுவ ரேடார்களில் இருந்து தப்பிக்க மலைப் பிரதேசங்களில் விமானம் பறந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று அந்தநாட்டு விமானப் போக்குவரத்துத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மலேசிய விமானி ஒருவர் கூறியபோது, மலேசியாவின் வடபகுதி மலைப் பிரதேசங்கள் வழியாக விமானம் பறந்து சென்றிருக்க வாய்ப்பு உள்ளது. அந்தப் பகுதியில் குணங் டகான் (2286 மீட்டர்), குணங் பின்டாங் (1828 மீட்டர்) ஆகிய சிகரங்கள் மட்டுமே உயமானவை. அந்த இரு சிகரங்களை பற்றி நன்கறிந்த விமானியால் 9000 அடி உயரத்தில் அந்த மலைப்பிரதேசத்தில் இரவிலும் விமானத்தை செலுத்த முடியும் என்று தெரிவித்தார்.
மலேசியாவின் முக்கிய எதிர்க்கட்சியான மக்கள் நீதிக் கட்சியின் தலைவர் அன்வர் இப்ராகிமுக்கு வழக்கு ஒன்றில் அண்மையில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மாயமான விமானத்தின் விமானி ஜகாரி அகமது ஷா மக்கள் நீதிக் கட்சியின் தீவிர உறுப்பினர் ஆவார். கட்சித் தலைவருக்கு எதிராக தீர்ப்பு அளிக்கப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் விமானத்தை அவர் கடத்தினாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஜகாரி அகமது ஷாவை தெரியாது என்று மறுத்துவந்த அன்வர் இப்ராகிம், முதல்முறையாக அவர் தனது உறவினர் என்று ஒப்புக் கொண்டுள்ளார். இதுகுறித்து கோலாலம்பூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், விமானி ஜகாரி அகமது ஷா எனது மருமகன்களில் ஒருவரின் நெருங்கிய உறவினர். என்னை அவர் பலமுறை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார். அதற்காக அவரை குற்றவாளியாக பார்க்க வேண்டாம். விசாரணைக்குப் பிறகு எந்த முடிவுக்கும் வரலாம் என்று கேட்டுக் கொண்டார்.
மாயமான விமானத்தை தற்போது 26 நாடுகள் தேடி வருகின்றன. இந்நிலையில் டிஜிட்டல்குளோப் என்ற தனியார் செயற்கைக்கோள் நிறுவனத்தின் உதவியுடன் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் வரை படங்களின் மூலம் விமானத்தை தேடி வருகின்றனர்.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா உள்ளிட்ட நாடுகளும் தங்களது செயற்கைக்கோள்கள் மூலம் தேடுதல் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.
கடந்த மார்ச் 8-ம் தேதி அதிகாலை 12.41 மணிக்கு கோலாலம் பூரில் இருந்து 239 பேருடன் சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 1.20 மணிக்கு ரேடாரில் இருந்து மறைந்தது. எந்த தடயமும் கிடைக்காத நிலையில் மலேசிய விமானத்தின் மர்ம முடிச்சை செயற்கைக்கோள்களால் மட்டுமே அவிழ்க்க முடியும் என்று நிபுணர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
மாலத்தீவு பகுதியில் மர்ம விமானம் பறந்ததாக அந்தப் பகுதி வாசிகள் தெரிவித்துள்ளனர். மார்ச் 8-ம் தேதி காலை 6.15 மணி அளவில் ஜம்போ ஜெட் விமானம் மிகவும் தாழ்வாகப் பறந்ததை மாலத்தீவின் குடா ஹவுத்து பகுதியைச் சேர்ந்த மக்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறியதாவது:-
எங்கள் தீவில் மிகப் பெரிய விமானம் இவ்வளவு தாழ்வாக பறந்ததை நாங்கள் பார்த்தது இல்லை, விமானத்தின் கதவுகள்கூட தெளிவாகத் தெரிந்தன. அதன் சத்தம் காதை கிழிப்பதாக இருந்தது. வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள்கூட விமானத்தின் சத்தத்தை கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்து வேடிக்கை பார்த்தோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த மர்ம விமானம் அநேகமாக மாயமான மலேசிய விமானமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தேதி, நேரம் ஆகியவை பொருத்தமாக இருப்பதால் இதுகுறித்தும் மலேசிய அரசு விசாரணையைத் தொடங்கியுள்ளது. கிராம மக்களை மேற்கோள் காட்டி மாலத்தீவு நாளிதழான ஹவீரு இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.