எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மெல்போர்ன், மார்ச்.22 - மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள் இந்தியப் பெருங் கடலில் மிதப்பதை ஆஸ்திரேலிய விமானப் படை செயற்கைக்கோள் உதவியுடன் கண்டு பிடித்துள்ளது. எனினும் அவற்றை ஆய்வு செய்த பின்னரே உறுதியாக கூறமுடியும் என்று அந்த நாட்டு விமானப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ பகுதிக்கு ஆஸ்தி ரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 7 போர் விமானங்கள் விரைந்துள்ளன. இவை தவிர ஆஸ்திரேலிய போர்க் கப்பல்களும் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் நாடாளுமன்றத்தில் பேசியபோது, தென் இந்திய பெருங்கடலில் 2 உடைந்த துண்டுகள் மிதப்பதை செயற்கைக்கோள் மூலம் கண்டுபிடித்துள்ளோம், அவை மலேசிய விமானத்தின் பாகங்களா என்பதை ஆய்வு செய்த பின்னரே தெளிவுபடுத்த முடியும் என்றார். இதுகுறித்து மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கிடம் தொலைபேசியில் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து தென்மேற்கில் 2500 கி.மீட்டர் தொலைவில் 2 பாகங்கள் செயற்கைக்கோளில் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் ஒரு பாகத்தின் நீளம் 78 அடியாக உள்ளது. அநேகமாக அந்தப் பாகம் விமானத்தின் வால் பகுதியாக இருக்கக்கூடும். மற்றொரு உடைந்த துண்டு அதைவிட சிறியதாக உள்ளது என்று ஆஸ்திரேலிய விமானப் படை கமாண்டர் ஜான் மெக்கரே தெரி
வித்துள்ளார். பெர்த் பகுதியில் இருந்து புறப்பட்ட ஆஸ்திரேலிய போர் விமானங்கள் 4 மணி நேரத்தில் சம்பவ இடத்தை சென்றடைந்தன. ஆனால் மோசமான வானிலை காரணமாக செயற்கைக்கோளில் அடையாளம் காணப்பட்ட உடைந்த பாகங்களை தேடுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனிடையே மலேசிய கடற்படை சார்பில் 6 போர்க் கப்பல்கள், 3 ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத் துக்கு அனுப்பப் பட்டுள்ளன.
மலேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் டாடக் செரி ஹிஸ்காமுதின் டன் ஹூசைன் நிருபர்களிடம் பேசியபோது, ஆஸ்திரேலிய விமானப் படை தெரிவித்துள்ள தகவல் நம்பத்தகுந்ததாக உள்ளது, எனினும் அதனை உறுதி செய்தால்தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியும் என்று தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய விமானப் படை தகவலைத் தொடர்ந்து மலேசிய பிரதமர் நஜீப் ரசாக், நாட்டின் முப்படை தளபதிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். சம்பவ பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபடுவது குறித்து அவர் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
ஒருவேளை கடலில் மிதக்கும் 2 துண்டுகளும் விமானத்தின் பாகங்களாக இருந்தால் அந்த சுற்றுவட்டாரத்தில் விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடும் பணி தொடங்கப்படும்.
இதுகுறித்து அமெரிக்க விமான போக்குவரத்துத் துறை முன்னாள் அதிகாரி மைக்கேல் டேனியல் கூறியதாவது:- சம்பந்தப்பட்ட பகுதியில் சோனார் பயோ கருவிகள் மூலம் ரேடியோ அலைகள் கடலுக்கு அடியில் செலுத்தப்படும். அப் பகுதியில் கருப்புப் பெட்டி இருந்தால் சோனார் பயோஸ் கருவியில் சிக்னல் கிடைக்கும்.
விமானத்தின் கருப்புப் பெட்டி யில் உள்ள பேட்டரி 30 நாள்கள் வரை செயல்படும். எனவே சோனார் பயோஸ் கருவியின் ரேடியோ அலைகளுக்கு நிச்சயமாக சிக்னல் கிடைக்கும். எனினும் விமானத்தின் கருப்புப் பெட்டியை தேட எத்தனை நாள்களாகும் என்பதை கணிக்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.
மாயமான விமானத்தின் விமானி ஜகாரி அகமது ஷா தனது வீட்டில் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் சிமுலேட்டரை வடிவமைத்திருந் தார். அதனை மலேசிய போலீஸார் கைப்பற்றி ஆய்வு செய்தபோது இந்தியா, இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளின் விமான நிலைய ஓடுபாதைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
மேலும் சில பைல்கள் கடந்த பிப்ரவரியில் அழிக்கப்பட்டிருந்தன. அந்த பைல்களை மீண்டும் எடுக்க அமெரிக்காவின் எப்.பி.ஐ. புலனாய்வு அமைப்பு இப்போது உதவி செய்து வருகிறது.
நார்வே நாட்டைச் சேர்ந்த செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்ற சரக்குக் கப்பல் மொரீஷியஸ் நாட்டில் இருந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அரசு கேட்டுக் கொண்டதன்பேரில் விமான பாகங்கள் மிதப்பதாகக் கருதப்படும் கடல் பகுதியை செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சரக்குக் கப்பல் சென்றடைந்துள்ளது.
இதனிடையே பிரிட்டன் போர்க்கப்பல்களும் சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளன.
விமான பாகங்கள் மிதப்பதாகக் கூறப்படும் கடல் பகுதியில் அலைகளின் ஆக்ரோஷம் அதிகமாக உள்ளது. ஒரு விநாடிக்கு ஒரு மீட்டர் தொலைவுக்கு பொருள்களை இழுத்துச் செல்லும் அலைகளின் ஆற்றல் உள்ளது. ஆஸ்திரேலிய செயற்கைக்கோள் படம் கடந்த 16-ம் தேதி எடுக்கப்பட்டுள்ளது. எனவே 4 நாள்களுக்குள் உடைந்த பாகங்கள் தொலைதூரத்துக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவே அந்தப் பகுதியில் தேடுதல் எல்லை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.