முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலவர வழக்கு: சிங்கப்பூரில் 14 இந்தியர்களுக்கு சிறை

வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

சிங்கப்பூர், மார்ச் 22 - சிங்கப்பூரில் கடந்த ஆணடு நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் 14 இந்தியர்களுக்கு அங்குள்ள நீதிமன்றம் 7 மாத சிறைதணடனை விதித்து தீர்பளித்தது.

அவர்களில் 11 பேருக்கு 7 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கலவரத்தின் போது சிங்கப்பூரில் உள்ள சிறப்பு அங்காடிகளில் உணவு மற்றும் பீர் திருடியதாக புகார் கூறப்பட்ட 3பேருக்கு மேலும் ஒரு வாரம் கூடுதலாக சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த 14 பேரும் 21 முதல் 39 வயதுக்குள்பட்ட கட்டட தொழிலாளர்கள் ஆவர்.

கடந்த 2013-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்ற கலவரத்தின்போது சட்டத்துக்கு புறம்பான வகையில் கூடியதாக புகார் பதிவு செய்யப்பட்டது. இந்தக் கலவர வழக்கில் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 20 பேர் விசாரணைக்காக காத்திருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்