எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோலாலம்பூர்,மார்ச்.25 - பியர்ஸ் விமானத் தளத்தில் இருந்து தேடுதல் பணிக்காக புறப்படும் நியூசிலாந்து போர் விமானம். ஆஸ்திரேலியாவை ஒட்டிய தெற்கு இந்தியப் பெருங்கடலில் மேலும் சில உடைந்த பாகங்கள் மிதப்பதை பிரான்ஸ் செயற்கைக்கோள் கண்டுபிடித்துள்ளது. எனினும் விமானத்தின் எந்தப் பாகமும் இதுவரை மீட்கப்படாத தால் எதையும் உறுதியாகக் கூற முடியாது என்று ஆஸ்திரேலிய கடற்படை தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை ஆஸ்திரேலியா வெளியிட்ட செயற்கைக் கோள் புகைப்படத்தில் இரண்டு உடைந்து துண்டுகள் மிதப்பதாகக் கூறப்பட்டது. அவற்றை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலிய செயற்கைக்கோள் சுட்டிக்காட்டிய இடத்தில் இருந்து 120 கி.மீட்டர் தொலைவில் 74 அடி நீளம் 43 அடி அகலம் கொண்டு மற்றொரு உடைந்த துண்டு மிதப்பதை சீன செயற்கைக்கோள் கண்டுபிடித்தது.
அதே பகுதியில் மேலும் சில உடைந்த துண்டுகள் மிதப்பது பிரான்ஸ் செயற்கைக்கோள் புகைப்படங்களில் பதிவாகி யுள்ளது. அந்தப் படங்கள் ஆஸ்திரேலிய கடற்படைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதுவரை கிடைத்துள்ள செயற்கைக்கோள் ஆதாரங்களின் அடிப்படையில் சம்பவ கடல் பகுதிக்கு கூடுதல் விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சீனா, அமெரிக்க போர் விமானங்களுடன் இந்திய கடற்படையைச் சேர்ந்த பி8 போர் விமானம், விமானப் படையைச் சேர்ந்த சி-130ஜே போர் விமானம் ஆகியவையும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள.
நியூசிலாந்தின் பி3 ஒரியன் போர் விமான பைலட், குறிப்பிட்ட பகுதியில் பயணிகளின் உடைமை களை வைக்க பயன்படுத்தப்படும் மரப்பெட்டி மற்றும் பல்வேறு வண்ணங்களில் பெல்ட்டுகள் மிதப்பதை பார்த்துள்ளார்.
பொதுவாக போர் விமானங்களில் தேடும்போது மேலோட்டமாக மட்டுமே கண்காணிக்க முடியும். எனவே சம்பவ பகுதிக்கு போர்க் கப்பல்கள் விரைந்துள்ளன. இப் போதைய நிலையில் சில சரக்கு கப்பல்களும் ஆஸ்திரேலிய கடற் படையைச் சேர்ந்த சக்சஸ் என்ற போர்க்கப்பலும் மட்டுமே சம்பவ பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
அமெரிக்கா, பிரிட்டன், சீனா அனுப்பிய போர்க் கப்பல்கள் சம்பவ இடத்தை நெருங்கியுள்ளன. அந்தக் கப்பல்களும் இணையும் போது தேடுதல் எல்லை விரிவு படுத்தப்படும் என்று தெரிகிறது.
தேடுதல் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் நிருபர்களிடம் கூறியபோது, உறுதி யான பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதால் விமானத்தை தேடும் பணியில் புதிய நம்பிக்கை பிறந் துள்ளது என்றார்.
மலேசியாவின் 2 போர் விமானங்கள், 6 போர்க்கப்பல்கள், ஆஸ்தி ரேலியாவின் 3 போர் விமானங்கள், ஒரு போர்க் கப்பல், ஒரு சரக்கு கப்பல், நியூசிலாந்தின் ஒரு போர் விமானம், அமெரிக்காவின் ஒரு போர் விமானம், சீனாவின் 2 போர் விமானங்கள், 9 போர்க்கப்பல்கள், 2 சரக்கு கப்பல்கள், 4 ஹெலிகாப்டர்கள், இந்தோனேசி யாவின் 3 போர் விமானங்கள், 8 போர்க்கப்பல்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் 2 போர் விமானங்கள், பிரிட்டனின் ஒரு போர்க் கப்பல், ஜப்பானின் 3 போர் விமானங்கள், இந்தியாவின் 2 போர் விமானங்கள், தென்கொரியாவின் 2 போர் விமானங்கள் ஆகியவை பல்வேறு பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
இவற்றில் பெரும்பாலான போர் விமானங்களும் போர்க்கப்பல்களும் ஆஸ்திரேலிய கடற்பகுதிக்கு திருப்பிவிடப் பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் பியர்ஸ் விமான தளம் ஐ.நா. சபை விமான தளம் போன்று மாறியுள்ளது. அங்கு பல்வேறு நாடுகளின் போர் விமானங்கள் தரையிறங்கியுள்ளன.
ஆஸ்திரேலிய விமானப் படை சார்பில் சம்பவ கடல் பகுதியில் ரேடியோ அலைகளை வெளியிடும் மிதவைகள் வீசப்பட்டுள்ளன. ஆனால் அவற்றின் தொலைதூர திறன் மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது.
தற்போது அமெரிக்காவிடம் மட்டுமே 6000 அடி ஆழத்தில் உள்ள பொருள்களைக் கண்டறியும் சோனார் பயோ கருவி உள்ளது. அந்த மிதவைக் கருவிகளைப் பயன்படுத்தினால் மட்டுமே கருப்புப் பெட்டியை கண்டுபிடிக்க முடியும் என்று மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அமெரிக்க ராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது.
மேலும் கடலுக்கு அடியில் தேடும் சிறிய ஆளில்லா நீர்மூழ்கிகளை தேடுதல் பணியில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஜெர்மனியில் இருந்து சிறப்பு நிபுணர்கள் ஆஸ்தி ரேலியாவுக்கு சென்றுள்ளனர். செயற்கைக்கோள்கள் அடை யாளம் காட்டியுள்ள பகுதிக்கு மிக அருகில் அன்டார்டிகா உள்ளது. எனவே பனிக்கட்டிகளை உடைக்கும் அதிநவீன கப்பலை சீன கடற்படை அனுப்பி வைத்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 10 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் திடீர் ராஜினாமா
22 Apr 2024டெல் அவிவ் : இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் அஹ்ரோன் ஹலிவா திடீரெனெ ராஜினாமா செய்துள்ளார்.
-
பார்லி. தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்? - சத்யபிரத சாகு விளக்கம்
22 Apr 2024சென்னை : செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதத்தை அளித்த காரணத்தால் தான் வாக்குப்பதிவு சதவீதத்தில் மாறுபாடு ஏற்பட்டது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு த
-
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கேட்டவருக்கு ரூ.75,000 அபராதம் : டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தள்ளுபடி
22 Apr 2024புதுடெல்லி : கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.
-
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு
22 Apr 2024இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
பிரதமரின் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்: தமிழக அமைச்சர் பதிவு
22 Apr 2024சென்னை : பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.
-
கம்யூ. சிந்தனையை செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி : உ.பி.யில் பிரதமர் மோடி பேச்சு
22 Apr 2024அலிகார் : மாவோயிஸ்ட், கம்யூனிஸ்டுகளின் சிந்தனையை இந்தியாவில் செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி செய்வதாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி
22 Apr 2024சென்னை : விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப பிரதமர் புதிய யுக்திகளை வைத்துள்ளார்: ராகுல் காந்தி
22 Apr 2024புதுடெல்லி : மக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமர் மோடி பல புதிய யுக்திகளை கொண்டிருப்பதாகவும், ஆனால் அவரின் பொய்களுக்கு முடிவு
-
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது : தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
சென்னை-சேலம் விமான சேவை நேரம் மாற்றம்
22 Apr 2024சென்னை : சென்னை விமானநிலையத்துக்கு மதிய நேரத்தில் சேலத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த தனியார் ஏர்லைன்ஸ் விமான சேவையின் நேரம் மாலை நேரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
-
தமிழக மகளிர் காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம்
22 Apr 2024சென்னை : தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஹசீனா சையத் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ஜம்மு காஷ்மீரில் 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
22 Apr 2024ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் நேற்று 9 இடங்களில் தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனையில் ஈடுபட்டனர்.
-
மக்களவை தேர்தல்: சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
22 Apr 2024சூரத் : சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
மே 1-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
22 Apr 2024புதுடெல்லி : சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
நாடு முழுவதும் வெப்ப அலை: தேர்தல் ஆணையம் ஆலோசனை
22 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருப்பதால் வாக்குப்பதிவு, பிரச்சாரம் நடைமுறைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து டெல்லியில
-
தமிழகம், கர்நாடக உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
22 Apr 2024புதுடில்லி, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 22) வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு: 24,000 பணியிட உத்தரவுகளை ரத்து செய்து கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு
22 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்க ஆசிரியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் அமைக்கப்பட்ட 2016-ம் ஆண்டு
-
65 வயதுக்கு மேற்பட்டோரும் மருத்துவ காப்பீடு பெறலாம் : இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
22 Apr 2024புதுடெல்லி, இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்:தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீத குளறுபடிக்கு செயலியே காரணம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
அசல் ஆவண நகல் ஒப்படைப்பு: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-ம் தேதி வரை நீட்டிப்பு
22 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை 34-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், "நிறம் மாறும் உலகில்"
22 Apr 2024நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளை பேசும் அழகான படமாக இப்படம் உருவாகியுள்ளார் அறிமுக இயக்குந
-
அதிகரிக்கும் வெயில் எதிரொலி: குளிர்ச்சியாக சாப்பிட்டால் தொற்று ஏற்பட வாய்ப்பு: பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, கோடை காலத்தில் அதிகரிக்கும் வெயிலால் குளிர்ச்சியாக சாப்பிட்டால் பாக்டீரியாக்கள் மற்றும் கொசுக்கள் மூலமாக பலருக்கு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படுவதாக பொது சுகாதார