எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோலாலம்பூர்,மார்ச்.28 - மலேசிய விமானத்தின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் 122 பொருள்கள் தெற்கு இந்திய பெருங்கடலில் மிதந்து வருவதாகவும், அப்பகுதியில் தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் மலேசிய அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சீனாவின் பெய்ஜிங் நோக்கி கடந்த மார்ச் 8-ம் தேதி புறப்பட்ட எம்.எச். 370 விமானம், ரேடாரின் கண் காணிப்பிலிருந்து மறைந்து திடீரென மாயமானது. அந்த விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருக் கும் என கருதப்படுகிறது. அங்கு நடைபெற்று வந்த தேடுதல் பணிகள், மோசமான வானிலை காரணமாக கடந்த செவ் வாய்க்கிழமை நிறுத்திவைக்கப்பட்டது.
நேற்றுமுன்தினம் காலை வானிலையில் முன்னேற்றம் காணப்பட்டதைத் தொடர்ந்து, தேடுதல் பணி மீண்டும் தொடங்கியது. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், சீனா, தென் கொரியா ஆகிய நாடு கள் தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், மலேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசைன் கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பிரான்ஸின் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்ததில் தெற்கு இந்திய பெருங்கடலில் விமானத்தின் 122 பொருள்கள் மிதப்பது தெரியவந்துள்ளது. பெர்த்தில் இருந்து 2,557 கி.மீ. தூரத்தில் கடல் பகுதியில் மிதந்து வரும் அந்த பொருள்களின் அளவு ஒரு மீட்டர் நீளம் முதல் 23 மீட்டர் நீளம் வரை உள்ளதாகத் தெரிகிறது. தேடுதல் பணியை முன்னின்று நடத்தி வரும் ஆஸ்திரேலியாவுக்கு இந்த புகைப்படங்களை அனுப்பிவைத்துள்ளோம்.
எனினும், அந்த பொருள்கள் எம்.எச். 370 விமானத்தின் பாகங்களா என்பதை இப்போதைக்கு உறுதி செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம். பிரான்ஸைப் போன்று ஆஸ்திரேலியாவும், சீனாவும் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்களை அனுப்பிவைத்துள்ளது. அவை அனைத்தும் விமானம் விழுந்து கிடக்கும் இடத்தை அறிய உதவிகரமாக இருக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை பேசியதாவது: “இப்போது வரை கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப் படையில் எம்.எச். 370 விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விபத்துக்குள்ளாகிவிட்டது என்றும், அதில் பயணம் செய்த 239 பேரும் உயிரிழந்துவிட்டனர் என்றும் மலேசிய அரசு அறிவித்துள்ளது.
விமானம் கடைசியாக பறந்ததாக கருதப்படும் பகுதியில், அதன் சிதைந்த பாகங்கள் சில மிதந்து கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சிதைந்த விமானத்தில் அனைத்து பாகங் களையும் மீட்க முடியாமல் போனால் கூட, ஒரு சில பாகங்களையாவது மீட்க முடியும் என்ற நம்பிக்கையுள்ளது.
தேடுதல் பணியில் 12 விமானங் களும், 2 கப்பல்களும் ஈடுபட்டுள்ளன. விமானத்தில் பைலட்டுகளின் உரையாடல்கள் பதிவாகியிருக்கும் கறுப்புப் பெட்டியை தேடுவதற்கான கருவி ஆஸ்திரேலிய கப்பல் மூலம் விபத்து நிகழ்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
விபத்து நிகழ்ந்த பகுதி ஆஸ்திரே லியாவுக்கு அருகில் உள்ள பகுதி என்பதை கருத்தில் கொண்டு, மோசமான வானிலையையும் பொருட்படுத்தாது மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபடப்போவதாக மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு உறுதியளித்துள்ளேன்” என்றார். பின்னர், விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரங்கல் தீர்மானத்தை பிரதமர் டோனி அபோட் கொண்டு வந்தார்.
அவர் கூறுகையில், “உயிரிழந்த 239 பேரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக இறந்துவிட்டதாக கருதப்படும் 6 ஆஸ்திரேலியர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லி, அவர்களின் இதயத்தில் ஏற்பட்டுள்ள வலியை நீக்க நம்மிடம் வார்த்தைகளே இல்லை. அன்புக்குரியவர்களை இழந்து வாடும், அந்த குடும்பத்தினரின் துக்கத்தில் நாங்களும் பங்கெடுத்துக் கொள்கிறோம்.” என்றார்.
கடைசியாக விமானத்திலிருந்து வந்த சிக்னலை பிரிட்டனின் இம்மர்ஸாட் செயற்கைக்கோள் நிறுவனம் பதிவு செய்துள்ளது. அதை ஆய்வு செய்ததில், தெற்கு இந்திய பெருங்கடலில் விமானம் நொறுங்கி விழுந்திருக்கும் என்று கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து விமானம் விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் கடந்த திங்கள்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தார் என் பது நினைவுகூரத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.