முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரியல் எஸ்டேட் அதிபரிடம் பணம்-​செல்போன் பறிப்பு

புதன்கிழமை, 1 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஜூன்.1 - பல்லாவரம் ரியல் எஸ்டேட் அதிபரிடம் பணம்​செல்போன் பறித்த 3 பேர்  போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.​பல்லாவரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் யோகானந்தம் (46). ரியல் எஸ்டேட் அதிபர்.நேற்று காலை 6 மணிக்கு பல்லாவரம் பழைய டிரங் ரோட்டில் யோகானந்தம் வாக்கிங் சென்றார். அப்போது அங்கு வந்த 3 பேர் அவரை வழிமறித்தனர். யோகானந்திடம் இருந்த பணம், செல்போன், கைகடிகாரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.

 இதுகுறித்து பல்லாவரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் கரன் சின்கா உத்தரவுப்படி பல்லாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்​ இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் ஆகியோர் கொண்ட தனிப் படையினர் விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து நேற்று காலை 10.30 மணி அளவில், திரிசூலம் ரெயில்வேகேட் அருகே திரிசூலத்தை சேர்ந்த பாளையம் (51), வெங்கடேசன் (41), சுடலை (50) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் தான் வழிப்பறி செய்தது தெரியவந்தது. 3 பேர் மீதும் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் வழிப்பறி கொள்ளையர்களை கைது செய்த பல்லாவரம் தனிப்படை போலீசாரை போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்