முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதாவுடன் பிரகாஷ் காரத் சந்திப்பு

புதன்கிழமை, 1 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஜூன்.2 - முதல்வர் ஜெயலலிதாவுடன் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் சந்தித்து பேசினார்.இதுகுறித்த விபரம் வருமாறு: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை,கூட்டணி கட்சியைச் சேர்ந்த இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் பிரகாஷ் காரத் நேற்று கோட்டையில் சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு பூச்செண்டு கொடுத்து, வாழ்த்துக்களை தெரிவித்தார்.  பின்னர் கோட்டையிருந்து சந்திப்புக்கு பின் வெளியே வந்த பிரகாஷ் காரத் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கூட்டணி கட்சி சார்பில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். 2ஜி விவரகாரத்தில் தயாநிதிமாறன் மீது தீவிரமாக விசாரணை செய்ய வேண்டும் என கோரிகை விடுத்துள்ளோம். தயாநிதிமாறன் பதவி விலக வேண்டுமா என்பதை குறித்து எங்கள் கட்சி மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த பிறகு தெரிவிக்கிறேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்