எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெல்லை,ஏப்.11 - நெல்லையில் இன்று முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க.வேட்பாளர் கே.ஆர்.பி.பிரபாகரனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதனைத்தொடர்ந்து நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வக்கீல் கே.ஆர்.பி.பிரபாகரனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதற்காக இன்று பிற்பகல் சென்னையில் இருந்து தனி விமானத்தில் மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாளை ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்குகிறார். பின்பு நெல்லை நீதிமன்றம் எதிரே உள்ள பெல்நகர் மைதானத்திற்கு பிற்பகல் 2 மணிக்கு வந்து பேசுகிறார். நெல்லை வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க. சார்பாக பிரமாண்ட வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாளை ஜான்ஸ் பள்ளி மைதானம் முதல் பெல்நகர் பொதுக்கூட்ட மேடை வரை சாலையின் இருபுறமும் டிஜிட்டல் வரவேற்பு போர்டுகள், வரவேற்பு வளைவுகள், அ.தி.மு.க. கொடி தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேடை அருகே பூக்கள், காய்கறிகள், பழங்கள், தென்னங்கதிர்கள் கொண்டு பிரமாண்ட வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரள செண்டை மேளம், பாண்டு வாத்தியங்கள், கொம்பு வாத்தியம் முழங்க பிரமாண்ட வரவேற்பு கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பூரண கும்ப மரியாதை, முளைப்பாரி வரவேற்பும் அளிக்கப்படுகிறது. கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள், அ.தி.மு.க. தொண்டர்கள் அமை சுமார் 40 ஆயிரம் சேர்கள் போடப்பட்டுள்ளன. அதுபோக சுமார் 1 லட்சம் பேர் பார்க்ககூடிய வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்திற்கு வரும் பொது மக்களுக்கு குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. வாகனங்களை நிறுத்த பாளை மருத்துவக்கல்லூரி மைதானம், சதக்கத்துல்லா அப்பா கல்லூரி மைதானத்திலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேடைக்கு கிழக்கு பகுதியில் முக்கிய பிரமுகர்கள் வாகனங்களை நிறுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேடைக்கு அருகே மற்றோரு மேடை அமைக்கப்பட்டு அதில் இன்னிசை கச்சேரி மற்றும் தேர்தல் பிரசார கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கழக அமைப்பு செயலாளர் பி.எச்.பாண்டியன், அமைச்சர் செந்தூர்பாண்டியன், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் முத்துகருப்பன் எம்.பி., தமிழக வீட்டு வசதி வாரிய தலைவர் முருகையாபாண்டியன் ஆகியோர் செய்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதா வருகையையொட்டி நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று காலை முதலே பாளை ஜான்ஸ் பள்ளி மைதானம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானங்கள் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரன் தலைமையில் துணை கமிஷனர்கள் சுரேஷ்குமார், சாம்சன் ஆகியோர் மேற்பார்வையில் 1500க்கும் மேற்பட்ட போலீசார்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்வர் சிறப்பு பாதுகாப்பு படையினரும் நெல்லை வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர். கூட்டத்திற்கு வருபவர்களை சோதனை செய்ய மெட்டல் டிடெக்டர் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியில் உள்ள வீடுகளின் மாடிகளிலும் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 23 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
சீனாவில் விமர்சனத்திற்குள்ளான புதிய ரயில் நிலைய வடிவமைப்பு
18 Apr 2024பெய்ஜிங், சீனாவின் நான்ஜிங் வடக்கு ரயில் நிலையத்தில் புதிய வடிவமைப்பு தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
சட்டவிரோத நுழைவு: அமெரிக்காவில் கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்
18 Apr 2024நியூயார்க், இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (57), கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது கைது செய்யப்பட்டார்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
கேரளாவில் நடந்த மாதிரி வாக்கு பதிவில் முறைகேடு ஏதும் இல்லை: தேர்தல் ஆணையம் மறுப்பு
18 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் முறைகேடு ஏதும் இல்லை என்று தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை: சென்னையில் இருந்து 2-வது நாளாக விமான சேவை ரத்து
18 Apr 2024சென்னை, ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் நேற்று இரண்டாவது நாளாக சென்னையில் இருந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
-
இஸ்ரேல் உடனான ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட கூகுள் ஊழியர்கள் 28 பேர் பணி நீக்கம்
18 Apr 2024வாஷிங்டன், கூகுள் நிறுவனம் - இஸ்ரேல் இடையிலான கிளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 28 ஊழியர்களை அந்நிறுவனம் நீக்கியுள்
-
பதிவான வாக்குகளை விவிபேட் சீட்டுகளுடன் ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
18 Apr 2024புது டெல்லி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குகளை விவிபேட் சீட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுளள்து.
-
சித்திரை திருவிழா: மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்
18 Apr 2024மதுரை, சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் இன்று நடக்கிறது.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட