முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏமனில் அதிபருக்கு எதிராக கலவரம்: 41 பேர் சுட்டுக்கொலை

வெள்ளிக்கிழமை, 3 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

 

சனா,ஜூன்.3 - ஏமன் நாட்டின் அதிபர் அலி அப்துல்லா சலே பதவி விலகக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நான்கு மாதமாக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் இதுவரை 400 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 

இந்நிலையில் நேற்று முன்தினம் சனா நகரில் மீண்டும் கலவரம் வெடித்தது. மக்கள் தெருக்களில் இறங்கி வன்முறையில் ஈடுபட்டதால் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் 41 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பல அரசு கட்டிடங்கள் தீ வைக்கப்பட்டன. இதில் பல இடங்களிலும் தீ பரவி பெரும் சேதம் ஏற்பட்டது. தொடர்ந்து தெருக்களில் கலவரம் நடந்து வருவதால் மோதலை தடுக்க ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது. ஏமனில் சனா நகரம் மட்டுமல்லாமல் மேலும் பல நகரங்களில் கலவரம் பரவி வருகிறது. அங்கும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்