முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாபா ராம்தேவுக்கு ஆதரவாக பல மாநிலங்களில் உண்ணாவிரதம்

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,மே.5 - ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராகவும் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தை தொடங்கியிருக்கும் பாபா ராம்தேவுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பலதரப்பட்ட மக்களும் பல சமூக அமைப்புகளும் தங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையில் உண்ணாவிரத போராட்டங்களையும் தர்ணா போராட்டங்களையும் நடத்தினர். 

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் ராம்தேவுக்கு ஆதரவாக 60-க்கும் மேலான சமூக மத அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். மாவட்டத்தில் பல்வேறு தலைநகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் உண்ணாவிரதத்தை தொடங்கினார்கள். ஆசிரியர்கள், மாணவர்கள்,சமூக ஆர்வலர்கள் என பலதரப்பட்ட மக்களும் ராம்தேவின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக பலவிதமான போராட்டங்களை நடத்தினர். பீகாரைப்போல நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் ராம்தேவுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டங்களை நடத்தினர். மதுரையிலும் நேற்று ராம்தேவுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்