முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ. வெற்றியை எதிர்த்து வழக்கு

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, ஜூன்.5 - புதுவை லோக் ஜனசக்தி மாநில தலைவர் உமாசுதன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஊசுடு தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கார்த்திகேயன் வேட்பு மனு தாக்கல் செய்தபோது, படிவம் 26-ல் காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், அவர் 2 ஆண்டுக்கு மேல் தண்டனை வழங்கக் கூடிய குற்றம் புரிந்துள்ளதாக குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் என்ற தகவலை தெரிவிக்கவில்லை. 

உண்மை சம்பவத்தை மறைத்து அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த தகவலை தேர்தல் நடத்தும் அதிகாரி, கலெக்டர் ஆகியோருக்கு தெரிவித்து இருந்தோம். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

தற்போது கார்த்திகேயன் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு நியாயமான முறையில் நடப்பதற்கும், தவறான தகவல் அளித்ததற்காகவும் வெற்றி செல்லத்தக்கதல்ல என அறிவிக்க கோரி கவர்னர் தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டும். இது தொடர்பாக சென்னை ஜகோர்ட்டில் சட்டபூர்வ நடவடிக்கையும் எடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்