முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

171 பயணிகளுடன் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது

செவ்வாய்க்கிழமை, 7 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜுன் - 7 - விமானத்தில் தீப்பிடித்ததாக ஏற்பட்ட சந்தேகத்தில் நேற்று பெங்களூர் சென்ற விமானம் அவசரமாக டெல்லியில் தரையிறக்கப்பட்டது. டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 171 பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகளுடன் கோ ஏர் கம்பெனிக்கு சொந்தமான தனியார் விமானம் ஒன்று நேற்று காலை 9.23 மணிக்கு  பெங்களூர் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானத்தின் சரக்கு பெட்டக அறையில் ஏதோ புகை வருவதாக விமானிக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஒருவேளை தீப்பிடித்து இருக்கலாம் என்றும் அவர் சந்தேகித்தார். இதையடுத்து தனது விமானத்தை டெல்லி விமான நிலையத்திலேயே தரையிறக்க அந்த விமானி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டார். இதையடுத்து அந்த விமானம் அவசரமாக தரையிறங்க அனுமதிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை 9.41 மணிக்கு விமானம் தரையிறங்கியது. அதிலிருந்த 165 பயணிகளும் 6 விமான சிப்பந்திகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விமானத்தை ஏர்பஸ் விமான கம்பெனியிடம் இருந்து கோ ஏர் நிறுவனம் சமீபத்தில்தான் புதிதாக வாங்கியிருந்தது. இந்த விமானத்தை பொறியியல் நிபுணர்கள் சோதனையிட்டு பார்த்தபோது அந்த விமானத்தில் புகையோ, தீயோ எதுவும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு அந்த விமானம் மீண்டும் பெங்களூர்  புறப்பட்டு சென்றது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்