எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போர்ட்ஆப் ஸ்பெயின், ஜூன் - 8 - மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. சுரேஷ் ரெய்னா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக ஒரு டுவெண்டி -20 போட்டி, 5 ஒருநாள் போட்டிகள் மற்றம் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், கேப்டன் மகேந்திரசிங் தோனி, காம்பீர், யுவராஜ்சிங் போன்ற அனுபவ வீரர்கள் ஓய்வில் இருப்பதால் இந்திய அணி இளம் வீரர்களுடன் சுரேஷ் ரெய்னா தலைமையில் களமிறங்கியுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற டுவெண்டி - 20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. அடுத்ததாக ஒருநாள் போட்டித் தொடர் துவங்கியது. போர்ட் ஆப் ஸ்பெயின், குயின்ஸ்பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சம்மி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். துவக்க வீரர்களாக சிம்மன்ஸ் மற்றும் எட்வர்ட்ஸ் களமிறங்கினர். ஆரம்பம் முதலே வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ரன் எடுக்க தடுமாறினர். இந்திய பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. இதனால் 7-வது ஓவரின் துவக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் விக்கெட்டை 23 ரன்களிலேயே இழந்தது. சிம்மன்ஸ் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் குமாரின் பந்துவீச்சில் ஹர்பஜன்சிங்கால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இவரைத் தொடர்ந்து பிராவோ களமிறங்கினார். இவரும் அதிக நேரம் நீடிக்கவில்லை. அணியின் எண்ணிக்கை 28 ஆக இருந்தபோது 4 ரன்களை மட்டும் எடுத்திருந்த பிராவோ, முனாப்பட்டேலின் பந்தில் சர்மாவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இந்நிலையில் சர்வான் துவக்க வீரர் எட்வர்ட்ஸுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவு தாக்குப்பிடித்தது. ஆனால் ஸ்கோர் 59 ஆக இருந்தபோது 21 ரன்களை எடுத்திருந்த எட்வர்ட்ஸ், ஹர்பஜனின் சுழலில் சிக்கினார். அந்த கேட்சை அருமையாக பிடித்தவர் விராட் கோஹ்லி. அடுத்து களமிறங்கிய சாமுவேல்ஸ் சிறப்பாக விளையாடினார். சாமுவேல்ஸ் மற்றும் சர்வான் ஜோடி அணியை மீட்கும் வகையில் விளையாடியது. இந்த ஜோடி இந்திய பந்துவீச்சை சமாளித்து ரன்களை எடுத்தது. இந்நிலையில் 38-வது ஓவரின் கடைசி பந்தில் 56 ரன்களை எடுத்திருந்த சர்வான், முனாப் பட்டேலின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேலால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது அணியின் ஸ்கோர் 141. அடுத்து சாமுவேல்சுடன் பிராவோ இணைந்தார். இந்த ஜோடியும் ஓரளவு ரன்களை உயர்த்தியது. அணியின் ஸ்கோர் 177 ஆக இருந்தபோது 55 ரன்களை எடுத்திருந்த சாமுவேல்ஸ், ரெய்னாவின் அற்புதமான பந்தில் கிளீன்போல்டானார். தொடர்ந்து அதிரடி பிராவோவும் 22 ரன்களை எடுத்த நிலையில் ஹர்பஜன்சிங் பந்தில் பார்த்தீவ் பட்டேலால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். தொடர்ந்து வந்தவர்கள் வருவதும் போவதுமாக இருந்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை எடுத்தது. ராம்பால் ஆட்டமிழக்காமல் 9 ரன்களையும், மார்ட்டின் 2 ரன்களையும் எடுத்திருந்தனர். இந்திய அணி தரப்பில் ஹர்பஜன்சிங் 3 விக்கெட்டுகளையும், சுரேஷ் ரெய்னா, குமார், முனாப் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
215 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி துவக்கத்தில் ஆட்டம் கண்டது. துவக்க ஆட்டக்காரர் பார்த்தீவ் பட்டேல் 13 ரன்கள் எடுத்த நிலையில் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து துவக்க வீரர் ஷிகார் தவானுடன், இளம் வீரர் விராட் கோஹ்லி ஜோடி சேர்ந்தார். கோஹ்லி 2 ரன்களே எடுத்த நிலையில் ராம்பாலின் அற்புதமான ஒரு ஆர்ம் பாலில் விக்கெட் கீப்பர் பாவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து பத்ரிநாத் களமிறங்கினார். இவர் தனது பங்கிற்கு 17 ரன்களை சேர்த்த நிலையில் பிஷூவின் பந்தில் விக்கெட் கீப்பரால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது இந்திய அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 61 ரன்களை எடுத்திருந்தது. தொடர்ந்து தவானுடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் அணியின் எண்ணிக்கையை சிறிது சிறிதாக உயர்த்தினர். அணியின் ஸ்கோர் 104 க்கு உயர்ந்தபோது அரை சதம் கடந்திருந்த இளம் வீரர் தவான், மார்ட்டின் பந்தில் சிம்மன்ஸால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து ரோகித் சர்மாவுடன் அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகச் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. அணியின் எண்ணிக்கை 184 க்கு உயர்ந்தபோது சுரேஷ் ரெய்னா 43 ரன்கள் எடுத்த நிலையில் மார்ட்டின் பந்தில் சிம்மன்ஸால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். தொடர்ந்து இறங்கிய யூசுப் பதான் 10 ரன்களை எடுத்த நிலையில் ராம்பாலிடம் காட் அண்டு போல்டு முறையில் அவுட்டானார். தொடர்ந்து 44.5 ஓவர்களிலேயே 217 ரன்களை அடித்த இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றியை ருசித்தது. மிகச் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா கடைசிவரை ஆட்டமிழக்காமல் 68 ரன்களையும், ஹர்பஜன் சிங் 6 ரன்களையும் எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வெற்றிகுறித்து கருத்து தெரிவித்த இந்திய கேப்டன் சுரேஷ் ரெய்னா, இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் பிரமாதமாக இருந்தது என்றார். சில வீரர்கள் பீல்டிங்கில் இன்னும் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தோல்வி குறித்து கருத்து தெரிவித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சம்மி, இன்னும் கூடுதலாக ரன் குவிக்க தவறியதே தங்கள் அணியின் தோல்விக்கு காரணம் என்றார். இந்திய அணியின் விக்கெட்டுகளை தொடர்ச்சியான இடைவெளியில் வீழ்த்தினாலும் தாங்கள் எடுத்த ரன்கள் போதுமானதாக இல்லை என்று தெரிவித்தார்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி6 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 5 hours ago |
ரவா பர்பி1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து: சந்திரசேகர ராவ் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
17 Apr 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக வந்த புகாரையடுத்து சந்திரசேகரராவ் இன்று தனது நிலைப்பாட்டை விளக்குமாறு தேர்தல் ஆணையம்
-
சிறையில் இருந்தே ஆட்சி செய்ய கெஜ்ரிவாலை அனுமதிக்க வேண்டும் : டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி மனு
17 Apr 2024புதுடெல்லி : சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி கட்சி மனுத்தாக்கல் செய்துள்ளது.
-
கோவையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்திக் வாக்கு சேகரிப்பு
17 Apr 2024கோவை : கோவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
பிரசாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு: நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி
17 Apr 2024வேலூர் : பிரச்சாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நடிகர் மன்சூர் அலிகான் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
150 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க வெற்றி பெறாது : ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி
17 Apr 2024காசியாபாத் : மக்களவை தேர்தலில் 150 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க.விற்கு வெற்றி கிடைக்காது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
உங்கள் ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் புதிய இணையதளம் : ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது
17 Apr 2024புது டெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்த பணிகளை முன்னிலைப்படுத்தும் விதமாக உங்கள் ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் புதிய இணையதளத்தை ஆம் ஆத்மி கட்சி நேற்ற
-
வெற்றி பெறுவோம் என்ற உறுதியுடன் வந்துள்ளேன் : அசாமில் பிரதமர் மோடி பிரசாரம்
17 Apr 2024கவுகாத்தி : 2014ம் ஆண்டு எதிர்பார்ப்புடன் மக்களை சந்திக்க வந்தேன், தற்போது வெற்றிபெறுவோம் என்ற உறுதியுடன் வந்துள்ளேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
60 ஆண்டுகளில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் : அசாமில் பிரதமர் மோடி பெருமிதம்
17 Apr 2024அசாம் : காங்கிரஸ் கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக உழைத்தேன்.