முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் போலீஸ்காரர் சுட்டுக்கொலை

வியாழக்கிழமை, 9 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர், ஜூன் - 9 - காஷ்மீர் மாநிலம் சோப்பூரில்  போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் அதிகாரியின் அலுவலகத்தில் போலீஸ்காரர் மன்சூர் அகமது பணியாற்றி வந்தார்.  அவர் நேற்று தனது மைத்துனர் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அவரை அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் சிலர் மிக அருகாமையில் வைத்து துப்பாக்கியால் சுட்டனர். இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் அங்கேயே சுருண்டு விழுந்து பலியானார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு  செய்து தப்பி ஓடிய தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று காலை 8.30 மணிக்கு நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சோப்பூரில் உள்ள இக்பால் மார்க்கெட்டிற்கு வந்த மன்சூர் அகமதுவை தீவிரவாதிகள் மிக அருகாமையில் வைத்து சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனால் அந்த மார்க்கெட் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மூன்று நாட்களில் நடந்த இரண்டாவது துப்பாக்கிச்சூடு சம்பவம் இது என்று போலீசார் தெரிவித்தனர்.
கடந்த திங்கள்கிழமை  சோப்பூரைச்  சேர்ந்த ஒரு வர்த்தக பிரமுகரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்