முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆ.ராசா உதவியாளர் - பால்வாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு

சனிக்கிழமை, 26 பெப்ரவரி 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,பிப்,26 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆ.ராசாவின் தனி செயலாளர் ஆர்.கே. சந்தோலியா மற்றும் ஸ்வான் கம்பெனி மேலதிகாரி ஷஹித் உஸ்மான் பல்வா ஆகியோர்களுக்கு ஜாமீன் வழங்க டெல்லி கோர்ட்டு மறுத்துவிட்டது. 

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆ.ராசா,சி.பி.ஐ. விசாரணைக்கு பின்பு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த முறைகேட்டில் தொடர்புடைய சந்தோலியா மற்றும் பல்வாவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி டெல்லி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இவர்கள் இருவரையும் விடுதலை செய்தால் சாட்சிகளையும் ஆதாரங்களையும் கலைத்தும் மறைத்தும்விடுவார்கள் என்று சி.பி.ஐ. சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கூறினார். இதை ஏற்றுக்கொள்வதாக அறிவித்த நீதிபதி ஓ.பி.சைனி, இவர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்