முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டம் தன் கடமையை செய்யும்: மம்தா பதிலடி

வியாழக்கிழமை, 9 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

 

கொல்கத்தா,ஜூன்.10 - சட்டம் தன் கடமையை செய்யும் என்றும், தாம் அதில் குறுக்கிடப் போவதில்லை என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் இடதுசாரி கட்சிகளின் அலுவலகங்களில் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இது பற்றி அந்த கட்சியினர் கூறுகையில், இது அரசியல் ரீதியாக திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று என்று கருத்து தெரிவித்து இருந்தார்கள். இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது, 

சட்டம் தன் கடமையை செய்கிறது. அதில் நான் குறுக்கிடப் போவதில்லை. நிர்வாகம் ஆயுத மீட்பு தொடர்பாக தன்னுடைய பணியை செய்கிறது. இதில் அரசியல் குறுக்கீடு எதுவும் ஏற்கப்பட மாட்டாது. அது திரிணாமுல் காங்கிரசாக இருந்தாலும் சரி, அல்லது வேறு எந்த கட்சியாக இருந்தாலும் சரி. குறுக்கீடுகளை ஏற்றுக் கொள்ள மாட்டோம். தவறு செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள். நிர்வாகம் தன் கடமையை செய்யும் போது யாரையும் விட்டு வைக்காது. இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்