எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஜூன்.10 - மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க. அமைச்சர்கள் வெளியேற இன்று நடைபெறும் கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்படலாம் என்று தெரிகிறது. ரூ.1.76 லட்சம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி.மு.க.வின் மானம் காற்றில் பறந்துகொண்டியிருக்கிறது. தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனையடுத்து கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டு அதே திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதோடு மட்டுமல்லாது கனிமொழிக்கு டெல்லி உயர்நீதிமன்றமும் ஜாமீன் கொடுக்க மறுத்துவிட்டது. அதோடு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கனிமொழிக்கு தொடர்பு உள்ளது என்றும் கூறிவிட்டது. அதோடுமட்டுமல்லாது தற்போது தி.மு.க. அமைச்சர் தயாநிதி மாறனும் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. ஏர்செல் நிறுவனத்திற்கு மிரட்டல் விடுத்ததாகவும் சன் டி.வியில் முதலீடு செய்ய வற்புறுத்தியகாவும் அவர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. அதனால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இல்லாவிட்டால் வருகின்ற மழைக்கால கூட்டத்தொடரை நடத்தவிடமாட்டோம் என்றும் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்துள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி காங்கிரஸ் மீது கடும் கோபம் கொண்டியிருப்பதாக தெரிகிறது. டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கனிமொழியை பார்க்க சென்ற சோனியாவை சந்தித்து பேசவில்லை. ஒருவேளை சோனியா காந்தி புறக்கணித்துவிட்டாரோ என்னமோ தெரியவில்லை. கனிமொழிக்கு டெல்லி ஐகோர்ட்டிலும் ஜாமீன் கிடைக்காது என்று கருதிய கருணாநிதி, பெரியார் பிறந்த தினத்தன்று கூடா நட்பு கேடாய் முடியும் என்றார். அதாவது காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கக்கூடாது. இனிமேலும் வைக்கக்கடாது என்ற அர்த்தத்தில் கூறியுள்ளார் என்பது உண்மையாகும். மேலும் கனிமொழிக்கு டெல்லி ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கவில்லை என்று தெரிந்ததும் தி.மு.க. உயர்நிலைக்கூட்டம் இன்று சென்னையில் நடைபெறும் என்று கருணாநிதி அறிவித்தார். இந்த கூட்டத்தில் உயர்மட்ட உறுப்பினர்கள் மற்றும் அனைத்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று கருணாநிதி உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது.
கூட்டத்தில் மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து தி.மு.க. அமைச்சர்கள் வெளியேற முடிவு எடுக்கலாம் என்று தெரிகிறது. அப்படி முடிவு எடுத்தால் ஆ.ராசா மாதிரி அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது மாதிரி, தயாநிதி மாறனுக்கும் அந்தகதி ஏற்படாமல் தவிர்க்கப்படலாம் என்றும் தெரிகிறது. மத்தியில் உள்ள தி.மு.க. அமைச்சர்கள் எம்.கே. அழகிரி,எஸ்.எஸ். பழனிமாணிக்கம், காந்தி செல்வம், டி.நெப்போலியன், எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோரும் மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுவார்கள் என்று தெரிகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தி.மு.க. வும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் முக்கிய கூட்டணி கட்சிகளாக உள்ளன. இந்த இரண்டு கட்சிகளுக்கும் தலா 18 எம்.பி.க்கள் உள்ளனர்.
காங்கிரஸ் மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்துவதற்காக மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க. வெளியேறினாலும் அரசுக்கு ஆதரவு தொடரும் என்று காங்கிரசார் பேசிக்கொள்கிறார்கள். அதேசமயத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகினால் மத்திய அரசின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதையும் காங்கிரசார் ஒப்புக்கொள்வதாக தெரிகிறது. தி.மு.க.வை கூட்டணியில் இருந்து விலக்கினால் நாங்கள் ஆதரவு கொடுக்கத்தயார் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா ஏற்கனவே கூறியுள்ளார். அதோடுமட்டுமல்லாமல் வேறு கட்சிகளின் ஆதரவையும் பெற்றுத்தருவதாக உறுதி அளித்திருந்தார். அ.தி.மு.க. வில் தற்போது லோக்சபை எம்.பி.க்கள் 9 பேர் உள்ளனர். அடுத்தவாரம் முதல்வர் ஜெயலலிதா டெல்லி செல்ல உள்ளார். அப்போது ஏற்கனவே சொன்ன உறுதிமொழியை மீண்டும் கூறுவார் என்று தெரிகிறது. காங்கிரஸ் மேலிடமும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொள்ள விரும்புகிறது. ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றவுடன் அவருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்தோடு தேனீர் விருந்திலும் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுத்தார். மேலும் தமிழக கவர்னராக இருக்கும் சுர்ஜித் சிங் பர்னாலாவின் பதவிக்காலம் வரும் 20-ம் தேதியுடன் முடிவுடைகிறது. அதன்பின்னர் மார்க்கெரட் ஆல்வாவை கவர்னராக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. அ.தி.மு.க.வுடன் உறவு வைத்துக்கொள்வதற்காகவே மத்திய அரசு இந்த முடிவை எடுக்கும் என்றும் பேசப்படுகிறது.
இதற்கிடையில் தி.மு.க. கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படலாம் என்ற சஞசலத்தில் காங்கிரஸ் இருக்கிறது. தி.மு.க. உயர்மட்ட கூட்டம் கூறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், தி.மு.க. மேல்மட்ட கூட்டத்தில் எடுக்கும் முடிவுக்கு தகுந்தவாறு எங்களது பதில் நடவடிக்கை இருக்கும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
25 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு