முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நாடு தழுவிய போராட்டம்- பாரதிய ஜனதா அறிவிப்பு

சனிக்கிழமை, 11 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

ஜெய்பூர்,ஜூன்.- 11 - ஊழல்,கறுப்புப்பணம், மத்திய அரசின் தவறான கொள்கைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வருகின்ற 23-ம் தேதியில் இருந்து 4 நாட்கள் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று பாரதிய ஜனதா அறிவித்துள்ளது.  நாட்டில் ஊழலை ஒழிக்க பல்வேறு முனைகளில் இருந்து போராட்டம் தொடங்கியுள்ளது. ஊழலை எதிர்த்து பிரபல சமூக சேவகர் அண்ணா ஹசரே புதுடெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார். இதனையொட்டி லோக்பால் மசோதா விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற உள்ளது. அதனையடுத்து பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதற்கு பாரதிய ஜனதா ஆதரவு தெரிவித்திருப்பதோடு ஊழல், வெளிநாடுகளில் கறுப்புப்பணம் பதுக்கிவைத்திருப்பது மற்றும் மத்திய அரசின் தவறான கொள்கைகள் குறித்து மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வருகின்ற 23-ம் தேதியில் இருந்து 4 நாட்கள் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.
மத்தியில் காங்கிரஸ் அரசின் தவறான கொள்கைகளை மக்களிடம் எடுத்து சொல்லப்படும். இதற்காக நாடு முழுவதும் நகரங்கள், கிராமங்களில் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டம் ஆகியவை நடத்தப்படும் என்று கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்  கிரண் மகேஷ்வரி நேற்று ஜெய்ப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறினார். ஊழலை எதிர்த்து ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த ராம்தேவ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது ஜனநாயகத்தை அவமதிப்பதாகும். ஜனநாயகத்திற்கு மீண்டும் மதிப்பும் மரியாதையும் ஏற்பட இந்த போராட்டம் நடத்தப்படும் என்றும் மகேஷ்வரி மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்