எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆன்டிகுவா, ஜூன் - 13 - மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது. இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஒரு டுவெண்டி - 20, 5 ஒரு நாள் போட்டிகள், 3 டெஸ்ட் போட்டிகள் இந்த தொடரில் உள்ளன. இதில் முதலில் நடைபெற்ற டுவெண்டி - 20 போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி, தொடர்ந்து ஒரு நாள் போட்டிகள் இரண்டில் வெற்றிபெற்று 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரிலும் முன்னிலை பெற்றிருந்தது.
இந்நிலையில் இவ்விரண்டு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றிபெற்றால் தொடரை வென்றுவிடும் உத்வேகத்துடன் இந்திய அணியும், தொடரை இழக்காமல் இருக்க இந்த போட்டியில் வென்றே தீரவேண்டிய கட்டாயத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணியும் களமிறங்கின. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா, வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட் செய்ய கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து துவக்க ஆட்டக்காரர்களாக சிம்மன்சும், எட்வர்ட்சும் களமிறங்கினர். துவக்கமே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சரிவாக அமைந்தது. இரண்டாவது ஓவரை வீசிய முனாப் பட்டேல் அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் ரன் எதுவும் எடுக்காத நிலையில் எட்வர்ட்சை அவுட்டாக்கினார். விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேல், எட்வர்ட்ஸ் கொடுத்த கேட்சை அழகாக பிடித்து அவரை வெளியேற்றினார். தொடர்ந்து ராம்நரேஷ் சர்வான் களமிறங்கினார். இவரும் சிம்மன்சும் நிதானமாக ரன் எண்ணிக்கையை உயர்த்தினர். இந்நிலையில் அணியின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்தபோது 28 ரன்களை எடுத்திருந்த சர்வான் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். இதைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் சரிவு துவங்கியது. இந்த சரிவை துவக்கிவைத்தவர் இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா. அப்போது களமிறங்கிய சாமுவேல்ஸ் 1 ரன்னை மட்டுமே எடுத்து மிஸ்ராவின் பந்தில் பார்த்தீவ் பட்டேலால் ஸ்டம்ப்பிங் முறையில் அவுட்டானார். இவரைத் தொடர்ந்து வந்தார் அறிமுக வீரர் ஹயாத். இவரும் மிஸ்ராவின் சுழலில் ஏமாந்து 1 ரன்னை மட்டும் எடுத்து கிளீன் போல்டானார். அடுத்ததாக அதிரடி வீரர் பொலார்டு களமிறங்கினார். இந்நிலையில் நன்கு விளையாடிக்கொண்டிருந்த சிம்மன்சும் 45 ரன்கள் எடுத்த நிலையில் மிஸ்ராவின் பந்தில் விராட் கோஹ்லியால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து விக்கெட் கீப்பர் பாவ் களமிறங்கினார். அணியின் எண்ணிக்கை 85 ஐ எட்டியபோது ஹர்பஜன் சுழலில் பொலார்டு 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அவுட்டானார். இந்நிலையில் கேப்டன் டேரன் சம்மி களமிறங்கினார். இவராலும் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சம்மி 3 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் முனாப் பட்டேலின் பந்தில் பார்த்தீவ் பட்டேலால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். வெஸ்ட் இண்டீஸ் அணி 29.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களை மட்டுமே எடுத்து தத்தளித்தது. இந்நிலையில் ரஸ்ஸல் களமிறங்கினார். இவரும் பாவ்வும் வெஸ்ட் இண்டீஸ் அணியை தூக்கி நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த ஜோடி கிட்டத்தட்ட 15 ஓவர்கள் தாக்குப்பிடித்து விளையாடியது. குறிப்பாக ரஸ்ஸல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியின் எண்ணிக்கை 174 க்கு உயர்ந்தபோது 36 ரன்களை எடுத்திருந்த பாவ், முனாப் பட்டேலின் பந்தில் தவானால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்ததாக கீமா ரோச் களமிறங்கினார். இந்நிலையில் ரஸ்ஸலின் அதிரடி தொடர்ந்தது. ரஸ்ஸல் தான் சந்தித்த கடைசி 14 பந்துகளில் 42 ரன்களை குவித்தார். இவரது அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 225 ரன்கள் என்ற கெளரவமான ஸ்கோரை எட்டியது. ரஸ்ஸல் ஆட்டமிழக்காமல் 64 பந்துகளில் 92 ரன்களையும், ரோச் ஆட்டமிழக்காமல் 7 ரன்களையும் எடுத்திருந்தனர். இந்திய தரப்பில் முனாப் பட்டேல், அமித் மிஸ்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை விரட்டிய இந்திய அணியில் துவக்க வீரர் பார்த்தீவ் பட்டேல் அதிரடியாக துவக்கினார். ஆனால் தவான் துவக்கம் சரியாக இல்லை. அணியின் எண்ணிக்கை 26 ஐ எட்டியபோது தவான் கேப்டன் டேரன் சம்மியின் பந்தில் 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் சாமுவேல்சால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இவரைத் தொடர்ந்து கடந்த போட்டியின் ஆட்டநாயகன் விராட் கோஹ்லி தான் சந்தித்த முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யூ. முறையில் அம்பயரின் தவறான தீர்ப்பினால் அவுட்டானார். இதனால் 26 ரன்களிலேயே இந்திய அணி 2 வது விக்கெட்டையும் இழந்தது. தொடர்ந்து தமிழக வீரர் பத்ரிநாத் களமிறங்கினார். இவர் மிக நிதானமாகவே ஆடினார். அணியின் எண்ணிக்கை 60 ஆக இருந்தபோது 11 ரன்களை எடுத்திருந்த பத்ரிநாத் ரன் அவுட்டானார். இவரைத் தொடர்ந்து ரோஹித் சர்மா களமிறங்கினார். அணியின் எண்ணிக்கை 79 ஐ எட்டியபோது நன்கு விளையாடிக்கொண்டிருந்த பார்த்தீவ் பட்டேல் 46 ரன்களில் பிஷுவின் சுழல் பந்தில் வீழ்ந்தார். ரஸ்ஸல் கேட்ச் பிடித்து பட்டேலை வெளியேற்றினார். தொடர்ந்து கேப்டன் ரெய்னா வந்தார். இவரும் அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அணியின் எண்ணிக்கை 88 ஆக இருந்தபோது 3 ரன்களை எடுத்திருந்த ரெய்னா, பொலார்டின் பந்தில் சிம்மன்சால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது இந்திய அணி 21.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அடுத்து வந்த யூசுப்பதான் ஒரு ரன் எடுத்த நிலையில் , பிஷுவின் சுழற்பந்தை சரியாக கணிக்காமல் தூக்கி அடித்தார். அந்த கஷ்டமான கேட்சை அற்புதமாக பிடித்தார் சிம்மன்ஸ். ஒரு முனையில் விக்கெட்டுகள் தொடர்ச்சியாக விழுந்தாலும் ரோஹித் சர்மா நிதானமாக நின்று ரன்களை சேர்த்துகொண்டிருந்தார். கிட்டத்தட்ட இந்திய அணியும் வெஸ்ட் இண்டீஸ் அணியைப் போலவே தடுமாறியது. இந்நிலையில் ஹர்பஜன்சிங், ரோஹித் உடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் பொறுப்பை உணர்ந்து அடிக்க வேண்டிய பந்துகளை அடித்து ரன் எண்ணிக்கையை உயர்த்தினர். இந்த ஜோடியை பிரிக்க வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அணியின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்தபோது அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த ஹர்பஜன் சிங் 41 ரன்கள் எடுத்த நிலையில் ரஸ்ஸல் பந்தில் விக்கெட் கீப்பரால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய பிரவீன் குமார் பேட்டிங் பவர் பிளேயை பயன்படுத்தி அதிரடியாக ரன்களை குவித்தார். எதிர் முனையில் ரோஹித்தும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி 46.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்களை எடுத்தது. இதனால் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. ரோஹித் சர்மாக ஆட்டமிழக்காமல் 86 ரன்களையும், குமார் ஆட்டமிழக்காமல் 25 ரன்களையும் எடுத்திருந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் டேரன் சம்மி, பிஷு ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ரஸ்ஸல், பொல்லார்டு ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 64 பந்துகளில் 92 ரன்களைக் குவித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரஸ்ஸல் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் 3 - 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. மேற்கு இந்திய தீவுகள் அணி ஏப்ரல் 2008 க்கு பிறகு எந்த ஒரு டெஸ்ட் விளையாடும் நாட்டுக்கு எதிராகவும் தொடரை வெல்லவில்லை என்ற பரிதாப நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில்,