முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரமுகர்களின் மறைவுக்கு மே.வ. சட்டசபையில் இரங்கல்

புதன்கிழமை, 15 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, ஜூன் 15 - பிரபல ஓவியர் எம்.எப்.ஹுசேன், பிரபல திரைப்பட விமர்சகர் சித்தானந்ததாஸ் குப்தா, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்தபா பின்ஹாசம் உள்ளிட்ட 17 முக்கிய பிரமுகர்களின் மறைவுக்கு மேற்கு வங்க சட்டசபையில் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 

மேற்கு வங்க மாநில சட்டசபை நேற்று காலை கூடியதும், சபாநாயகர் பீமன் பந்தோபாத்தியாயா இரங்கல் குறிப்பு ஒன்றை வாசித்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. முஸ்தபா பின்ஹாசம், பிரபல ஓவியர் எம்.எப்.ஹுசேன், திரைப்பட விமர்சகர் சித்தானந்ததாஸ் குப்தா உள்ளிட்ட 17 பிரமுகர்களின் மறைவு குறித்த செய்தியை அவர் வாசித்தார். இதையடுத்து உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர். மறைந்த இந்த 17 முக்கிய பிரமுகர்களின் சாதனைகள் குறித்து சபாநாயகர் பேசினார்.

இந்த இரங்கல் தீர்மானத்தின்போது முதல்வர் மம்தா பேனர்ஜியைத் தவிர அனைத்து அமைச்சர்களும், எதிர்க்கட்சி தலைவர் சூர்யகாந்தா மிஸ்ராவும் அவையில் இருந்தனர். நேற்று மேற்கு வங்க சட்டசபையில் சிங்கூர் மசோதா தாக்கல் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால் இரங்கள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் அந்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்