தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் உள்ள 'நிர்வாக அதிகாரி (நிலை -III)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜூன்.15 - கடந்த வாரம் காணாமல் போன வழக்கறிஞரின் உடன் நேற்று ஏரியில் பிணமாக மீட்கப்பட்டது. அவர் கடத்தி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்பதால் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று அவரது தந்தை வழக்கறிஞர் சங்கரசுப்பு கோர்ட்டில் மனு செய்ததை ஏற்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அண்ணாநகர் மேற்கு தங்கம் காலனியைச் சேர்ந்தவர் சங்கரசுப்பு. பிரபல வழக்கறிஞர். இவரது மகன் சதீஷ்குமார். இவரும் சட்டப்படிப்பை முடித்துள்ளார்.
கடந்த 7ந்தேதி இரவு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற சதீஷ்குமார் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியாததால் சங்கரசுப்பு, திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். பின்னர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவையும் தாக்கல் செய்தார். அதில் மாயமான எனது மகனை கண்டுபிடிக்க போலீசார் தீவிரம் காட்டவில்லை. தனிப்படை அமைத்து அவரை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது. ஐ.சி.எப். வடக்கு காலனியில் உள்ள ஏரி அருகே சதீஷ்குமாரின் மோட்டார்சைக்கிளும், செல்போனும் கண்டெடுக்கப்பட்டது. அருகில் இருந்த ஏரியில் மூழ்கி சதீஷ்குமார் இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதினர்.
கடந்த 4 நாட்களாக தீயணைப்பு வீரர்கள் ஏரியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று மாலையில் சதீஷ்குமாரின் உடல் மீட்கப்பட்டது. அதனை பார்த்து அவரது தந்தை சங்கரசுப்பு, தாய் மயிலம்மாள் ஆகியோர் கதறி அழுதனர். கடந்த 7 நாட்களாக சதீஷ்குமார் பற்றி எந்தவித தகவலும் இல்லாமல் இருந்ததால், அவர் எங்காவது வெளியில் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் மாலையில் அவர் பிணமாக மீட்கப்பட்டது உறவினர்களை மட்டுமின்றி போலீசாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சதீஷ்குமார் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. ஏரியில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை சதீஷ்குமாரை யாராவது கொன்று ஏரியில் வீசினார்களா? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, சதீஷ்குமாரின் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரியவில்லை.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர்தான் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என்றார். இந்த நிலையில் சதீஷ் குமார் தந்தை வக்கீல் சங்கரசுப்பு சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது மகனின் முகம் முழுவதும் சிதைக்கப்பட்டுள்ளது. வலது கை சுண்டு விரல் சிதைக்கப்பட்டுள்ளது. இடது கையில் ரத்தக்கறை படிந்த காயம் உள்ளது. கழுத்தின் பின்பக்கத்தில் 3 அங்குல ஆழத்துக்கு காயம் உள்ளது. கால் விரல் நகங்கள் அகற்றப்பட்டு உள்ளது. முன் நெற்றியில் ரத்தக் காயங்கள் உள்ளது. இதை வைத்து பார்க்கும் போது மனிதாபிமானமற்ற முறையில் பலர் சேர்ந்து எனது மகனை கொடூரமாக கொலை செய்து இருப்பதாக அஞ்சுகிறேன் என் மீது கொண்ட பகையின் காரணமாக கூலிப்படை உதவியுடன் எனது மகனை கடத்திச் சென்று சித்ரவதை செய்து கொலை செய்து ஐ.சி.எப். ஏரியில் தூக்கிப் போட்டதாக கருதுகிறேன்.
எனவே எனது மகனின் உடலை நான் கூறும் தடயவியல் டாக்டர் உதவியுடன் கொண்ட மருத்துவ குழு மூலம் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடவேண்டும். இதனை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். மேலும் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனு nullநீதிபதிகள் நாகப்பன், சிவக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. சங்கரசுப்பு சார்பில் தமிழ்நாடு வக்கீல்கள் சங்க தலைவர் பிரபாகரன் ஆஜராகி வாதாடினார்.
இதையடுத்து nullநீதிபதி சென்னை அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஆவடி மருத்துவமனைகளில் தடயவியல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் மனுதாரர் கூறும் தடயவியல் மருத்துவ குழு துணையுடன் சதீஷ்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று நிதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 23-05-2022
23 May 2022 -
உக்ரைனில் நாள்தோறும் 100 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு- அதிபர் ஜெலன்ஸ்கி கவலை
23 May 2022உக்ரைனில் நாள்தோறும் 100 ராணுவ வீரர்கள் உயிரிழப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார்.
-
காலம் அறிந்து உதவிய தமிழக உடன்பிறப்புகளுக்கு நன்றி : இலங்கை எம்.பி. மனோ.கணேசன் உருக்கம்
23 May 2022இலங்கை : காலம் அறிந்து உதவிய தமிழக உடன்பிறப்புகளுக்கு நன்றி என்று இலங்கை எம்.பி. மனோ.கணேசன் தெரிவித்துள்ளார்.
-
குரங்கு காய்ச்சல் - 12 நாடுகளை சேர்ந்த 92 பேர் பாதிப்பு
23 May 2022ஜெனீவா : 12 நாடுகளை சேர்ந்த 92 பேர் குரங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
-
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்
23 May 2022குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
-
ஆஸ்திரேலியா புதிய பிரதமராக பதவியேற்றார் அந்தோணி அல்பானீஸ்
23 May 2022கான்பெரா : ஆஸ்திரேலிய நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார் அந்தோணி அல்பானீஸ்.
-
பராமரிப்பாளரின் விரலை கடித்து துப்பிய சிங்கம்
23 May 2022கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் சிங்கம் ஒன்று பராமரிப்பாளரின் விரலை கடித்து குதறும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது
23 May 2022முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
புதிய வகை ஒமைக்ரான் தொற்று குறித்து அச்சமடைய வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
23 May 2022புதிய வகை ஒமைக்ரான் தொற்று குறித்து அச்சமடைய தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தொடக்கம்: பயிர் உற்பத்தியில் தேசிய அளவில் முதல் 3 இடங்களை அடைய இலக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
23 May 2022பயிர்களின் உற்பத்தித் திறனில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை அடைய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
ரூ.500 கோடி திட்டங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு
23 May 2022புதுடெல்லி : இனி ரூ.500 கோடிக்கு மேல் மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்கள் அனைத்துக்கும் ‘கதிசக்தி’ திட்டத்தின் கீழ் உருவாக் கப்பட்டுள்ள ‘இணைப்புத் திட்டக் குழு’வின் வ
-
கொரோனா அச்சுறுத்தல் இருந்தும் மாஸ்க் அணியாமல் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் 'கிம்'
23 May 2022தன்னை தலைவனாக உருவாக்கிய ராணுவ அதிகாரி மரணமடைந்த நிலையில் அவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் வடகொரிய அதிபர் கிம் பங்கேற்றார்.
-
போர்க் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ரஷிய வீரருக்கு வாழ்நாள் சிறை தண்டனை உக்ரைன் கோர்ட்டு தீர்ப்பு
23 May 2022ரஷியா உக்ரைன் இடையேயான போரின், முதலாவது போர்க்குற்ற விசாரணையில் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
-
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
23 May 2022சென்னை : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல சவுதி அரேபியா தடை
23 May 2022கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
-
கேரள மாநிலத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தன ராஜஸ்தான், மகாராஷ்டிரா
23 May 2022கேரள மாநிலத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநில அரசுகள் குறைத்துள்ளன.
-
விருதுநகரில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு: ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் 806 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி தாக்கல் செய்தார்
23 May 2022விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
-
இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு: ஜப்பான் தொழில் துறையினரை சந்தித்து பிரதமர் மோடி பேச்சு
23 May 2022டோக்கியோ : இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறும், இந்தியாவில் முதலீடு செய்யக்கோரி ஜப்பான் தொழில் துறையினருடன் நேற்று பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
தைவான் மீது சீனா படையெடுத்தால் அந்நாட்டை பாதுகாக்க அமெரிக்கா களத்தில் இறங்கும் அதிபர் ஜோ பைடன் சூளுரை
23 May 2022தைவானை சீனா தாக்கினால், தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகளை அனுப்பும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.
-
கூட்டணி கட்சிகளால் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி பாதித்துள்ளது : தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி
23 May 2022சென்னை : தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் வளர்ச்சி பாதித்துள்ளது என்று தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழகத்தில் உருவான அரசியல் கூட
-
பெட்ரோல் வரி விகிதத்தில் சில விஷயங்களை மறைத்து பேசுகிறார் : அண்ணாமலை மீது செந்தில்பாலாஜி விமர்சனம்
23 May 2022கரூர் : பெட்ரோல் வரி விகிதத்தில் சில விஷயங்களை மறைத்தும் மறந்தும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். சிலருக்கு புரிதலும் இல்லை.
-
கோடை விடுமுறையில் வெளியூர் செல்ல மக்கள் ஆர்வம்: அரசு பஸ்களில் தினமும் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணம் : ஒரே வாரத்தில் இரு மடங்காக அதிகரித்த பயணிகள் எண்ணிக்கை
23 May 2022சென்னை : கோடை விடுமுறை தொடங்கியதை அடுத்து வெளியூர் மற்றும் சொந்த ஊர் செல்ல மக்கள் ஆர்வம் காட்டுவதால் அரசு விரைவு பேருந்துகளில் தினமும் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து ப
-
குறுவை சாகுபடிக்கு 3.675 மெ.டன் விதைகள், 56,229 மெ.டன் உரங்கள் இருப்பு வைப்பு : உழவர் நலத்துறை அமைச்சகம் தகவல்
23 May 2022சென்னை : குறுவை சாகுபடி ஆயத்தப் பணிக்காக 3,675 மெட்ரிக் டன் விதைகளும், 56,229 மெட்ரிக் டன் ரசாயன உரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக உழவர் நலத் துறை அமைச்சகம் தெரிவித்
-
போதிய அளவில் மாணவர் சேர்க்கை இல்லாததால் வரும் கல்வி ஆண்டில் 10 தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள் மூடல் : அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
23 May 2022சென்னை : தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
-
12 ஆண்டுகளுக்குப்பின் மே 26 முதல் மதுரை-தேனி ரயில் சேவை தொடக்கம்
23 May 2022மதுரை : 12 ஆண்டுகளுக்குப்பின் மே 26 முதல் மதுரை-தேனி இடையே ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதை அடுத்து மதுரை, தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.