எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன்.15 - கடந்த வாரம் காணாமல் போன வழக்கறிஞரின் உடன் நேற்று ஏரியில் பிணமாக மீட்கப்பட்டது. அவர் கடத்தி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்பதால் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று அவரது தந்தை வழக்கறிஞர் சங்கரசுப்பு கோர்ட்டில் மனு செய்ததை ஏற்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அண்ணாநகர் மேற்கு தங்கம் காலனியைச் சேர்ந்தவர் சங்கரசுப்பு. பிரபல வழக்கறிஞர். இவரது மகன் சதீஷ்குமார். இவரும் சட்டப்படிப்பை முடித்துள்ளார்.
கடந்த 7ந்தேதி இரவு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற சதீஷ்குமார் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியாததால் சங்கரசுப்பு, திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். பின்னர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவையும் தாக்கல் செய்தார். அதில் மாயமான எனது மகனை கண்டுபிடிக்க போலீசார் தீவிரம் காட்டவில்லை. தனிப்படை அமைத்து அவரை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது. ஐ.சி.எப். வடக்கு காலனியில் உள்ள ஏரி அருகே சதீஷ்குமாரின் மோட்டார்சைக்கிளும், செல்போனும் கண்டெடுக்கப்பட்டது. அருகில் இருந்த ஏரியில் மூழ்கி சதீஷ்குமார் இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதினர்.
கடந்த 4 நாட்களாக தீயணைப்பு வீரர்கள் ஏரியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று மாலையில் சதீஷ்குமாரின் உடல் மீட்கப்பட்டது. அதனை பார்த்து அவரது தந்தை சங்கரசுப்பு, தாய் மயிலம்மாள் ஆகியோர் கதறி அழுதனர். கடந்த 7 நாட்களாக சதீஷ்குமார் பற்றி எந்தவித தகவலும் இல்லாமல் இருந்ததால், அவர் எங்காவது வெளியில் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் மாலையில் அவர் பிணமாக மீட்கப்பட்டது உறவினர்களை மட்டுமின்றி போலீசாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சதீஷ்குமார் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. ஏரியில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை சதீஷ்குமாரை யாராவது கொன்று ஏரியில் வீசினார்களா? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, சதீஷ்குமாரின் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரியவில்லை.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர்தான் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என்றார். இந்த நிலையில் சதீஷ் குமார் தந்தை வக்கீல் சங்கரசுப்பு சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது மகனின் முகம் முழுவதும் சிதைக்கப்பட்டுள்ளது. வலது கை சுண்டு விரல் சிதைக்கப்பட்டுள்ளது. இடது கையில் ரத்தக்கறை படிந்த காயம் உள்ளது. கழுத்தின் பின்பக்கத்தில் 3 அங்குல ஆழத்துக்கு காயம் உள்ளது. கால் விரல் நகங்கள் அகற்றப்பட்டு உள்ளது. முன் நெற்றியில் ரத்தக் காயங்கள் உள்ளது. இதை வைத்து பார்க்கும் போது மனிதாபிமானமற்ற முறையில் பலர் சேர்ந்து எனது மகனை கொடூரமாக கொலை செய்து இருப்பதாக அஞ்சுகிறேன் என் மீது கொண்ட பகையின் காரணமாக கூலிப்படை உதவியுடன் எனது மகனை கடத்திச் சென்று சித்ரவதை செய்து கொலை செய்து ஐ.சி.எப். ஏரியில் தூக்கிப் போட்டதாக கருதுகிறேன்.
எனவே எனது மகனின் உடலை நான் கூறும் தடயவியல் டாக்டர் உதவியுடன் கொண்ட மருத்துவ குழு மூலம் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடவேண்டும். இதனை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். மேலும் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனு nullநீதிபதிகள் நாகப்பன், சிவக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. சங்கரசுப்பு சார்பில் தமிழ்நாடு வக்கீல்கள் சங்க தலைவர் பிரபாகரன் ஆஜராகி வாதாடினார்.
இதையடுத்து nullநீதிபதி சென்னை அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஆவடி மருத்துவமனைகளில் தடயவியல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் மனுதாரர் கூறும் தடயவியல் மருத்துவ குழு துணையுடன் சதீஷ்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று நிதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.