தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் உள்ள 'நிர்வாக அதிகாரி (நிலை -III)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜூன்.16 - தமிழக முதல்வர் ஜெயலலிதா 19, 20, 21 ஆகிய மூன்று நாட்கள் ஸ்ரீரங்கம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது தம்மை அமோக வெற்றிபெறச்செய்த தொகுதி வாக்காள பெருமக்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறார். முந்தைய தி.மு.க. மைனாரிட்டி ஆட்யின் ஏதேச்சதிகாரத்தால் மக்கள் வெறுப்படைந்த நிலையில் இருந்தனர். எப்படா சட்டமன்ற தேர்தல் வரும் என்று மக்கள் எதிர்பார்த்துக்கொண்டியிருந்தனர். தேர்தலுக்கு முன்பாக கோவை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் அ.தி.மு.க. கூட்டங்கள் நடைபெற்றன. அந்த கூட்டங்களில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கலந்துகொண்டு பேசினார். அந்த கூட்டங்களில் தமிழக வரலாற்றில் இல்லாத நிலைக்கு மக்கள் கூடி ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்தநிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்றும் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்தது. தேர்தலில் பணம் கொடுத்து எப்படியும் வெற்றிபெற்று வரலாம் என்று தி.மு.க. வினர் கனவுகண்டு கொண்டியிருந்தனர். இதுபற்றி தேர்தல் கமிஷனிடம் அ.தி.மு.க. சார்பில் புகார் செய்யப்பட்டது. மேலும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஜெயலலிதா யுக்தி வகுத்து செயல்பட்டார். சட்டசபை தேர்தலில் ஆண்டிபட்டி, சென்னை, திருச்சி, கோவை உள்பட 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் இருந்து அ.தி.மு.க. தொண்டர்களும் நிர்வாகிகளும் தங்களுடைய தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று ஜெயலலிதாவை கேட்டுக்கொண்டனர். ஆனால் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றியை கருத்தில் கொண்டு திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டார். ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டாலும் தமிழகம் முழுவதும் 20 நாட்களாக சூறாவளி பிரசாரம் செய்து அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். ஜெயலலிதாவுக்கு செனற இடமெல்லாம் மக்கள் கடலென திரண்டு ஆதரவு கொடுத்தனர். பிரசாரத்தின்போது தி.மு.க. ஆட்சியின் ஊழல், மத்தியில் நடந்த 2ஞி ஸ்பெக்ட்ரம் ஊழல், மின்சார பற்றாக்குறை ஆகியவற்றை மக்களிடத்தில் எடுத்துக்கூறினார். தேர்தல் நடந்து மே மாதம் 13-ம் .தேதி ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதில் அ.தி.மு.க. மட்டும் 145 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. தமிழகத்தில் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை பிடித்தது. ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதல்வராக பதவி ஏற்றார். பதவி ஏற்றவுடன்,அ.தி.மு.க. எம். எல்.ஏ.க்கள் தங்களுடைய தொகுதிகளுக்கு உடனடியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும்படி முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். நன்றி தெரிவிக்கும்போது பிரமாண்டமான முறையில் விழா எடுக்காமல் எளிமையாக கூறும்படியும் கேட்டுக்கொண்டார். முதல்வராக மீண்டும் பதவி ஏற்றுள்ள ஜெயலலிதாவுக்கு நிர்வாகத்தில் உடனடியாக சீர்திருத்தம் செய்ய வேண்டியிருந்ததாலும், சட்டசபை கூட்டம் நடந்து கொண்டியிருந்ததாலும் டெல்லிக்கு செல்லவிருந்ததாலும் அவர் உடனடியாக தாம் போட்டியிட்ட ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வந்து மக்களுக்கு நன்றி தெரிவிக்க முடியவில்லை. டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய ஜெயலலிதா தன்னுடைய தொகுதி மக்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தால் ஸ்ரீரங்கம் தொகுதியில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாக்களித்து, அவரை மகத்தான வெற்றி பெறச் செய்த ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வரும் 19-ம் தேதி அன்று காலை பயணம் மேற்கொள்கிறார். முதல் நாள் நிகழ்ச்சியாக 19-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெறவுள்ள அரசு விழாவில் ஸ்ரீரங்கம் தொகுதியில் செயல்படுத்தப்படவுள்ள பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அடுத்த நாள் (திங்கட்கிழமை) அந்தநல்லூர் ஒன்றியத்தில் கிராமந்தோறும் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.
அதன்பின்னர் 21-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மணிகண்டம் ஒன்றியத்தில் கிராமந்தோறும் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். மூன்று நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அன்று இரவே சென்னை திரும்புகிறார்.இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 23-05-2022
23 May 2022 -
உக்ரைனில் நாள்தோறும் 100 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு- அதிபர் ஜெலன்ஸ்கி கவலை
23 May 2022உக்ரைனில் நாள்தோறும் 100 ராணுவ வீரர்கள் உயிரிழப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார்.
-
காலம் அறிந்து உதவிய தமிழக உடன்பிறப்புகளுக்கு நன்றி : இலங்கை எம்.பி. மனோ.கணேசன் உருக்கம்
23 May 2022இலங்கை : காலம் அறிந்து உதவிய தமிழக உடன்பிறப்புகளுக்கு நன்றி என்று இலங்கை எம்.பி. மனோ.கணேசன் தெரிவித்துள்ளார்.
-
குரங்கு காய்ச்சல் - 12 நாடுகளை சேர்ந்த 92 பேர் பாதிப்பு
23 May 2022ஜெனீவா : 12 நாடுகளை சேர்ந்த 92 பேர் குரங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
-
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்
23 May 2022குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
-
ஆஸ்திரேலியா புதிய பிரதமராக பதவியேற்றார் அந்தோணி அல்பானீஸ்
23 May 2022கான்பெரா : ஆஸ்திரேலிய நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார் அந்தோணி அல்பானீஸ்.
-
பராமரிப்பாளரின் விரலை கடித்து துப்பிய சிங்கம்
23 May 2022கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் சிங்கம் ஒன்று பராமரிப்பாளரின் விரலை கடித்து குதறும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது
23 May 2022முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
புதிய வகை ஒமைக்ரான் தொற்று குறித்து அச்சமடைய வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
23 May 2022புதிய வகை ஒமைக்ரான் தொற்று குறித்து அச்சமடைய தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தொடக்கம்: பயிர் உற்பத்தியில் தேசிய அளவில் முதல் 3 இடங்களை அடைய இலக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
23 May 2022பயிர்களின் உற்பத்தித் திறனில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை அடைய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
ரூ.500 கோடி திட்டங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு
23 May 2022புதுடெல்லி : இனி ரூ.500 கோடிக்கு மேல் மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்கள் அனைத்துக்கும் ‘கதிசக்தி’ திட்டத்தின் கீழ் உருவாக் கப்பட்டுள்ள ‘இணைப்புத் திட்டக் குழு’வின் வ
-
கொரோனா அச்சுறுத்தல் இருந்தும் மாஸ்க் அணியாமல் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் 'கிம்'
23 May 2022தன்னை தலைவனாக உருவாக்கிய ராணுவ அதிகாரி மரணமடைந்த நிலையில் அவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் வடகொரிய அதிபர் கிம் பங்கேற்றார்.
-
போர்க் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ரஷிய வீரருக்கு வாழ்நாள் சிறை தண்டனை உக்ரைன் கோர்ட்டு தீர்ப்பு
23 May 2022ரஷியா உக்ரைன் இடையேயான போரின், முதலாவது போர்க்குற்ற விசாரணையில் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
-
இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல சவுதி அரேபியா தடை
23 May 2022கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
-
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
23 May 2022சென்னை : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கேரள மாநிலத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தன ராஜஸ்தான், மகாராஷ்டிரா
23 May 2022கேரள மாநிலத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநில அரசுகள் குறைத்துள்ளன.
-
விருதுநகரில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு: ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் 806 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி தாக்கல் செய்தார்
23 May 2022விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
-
இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு: ஜப்பான் தொழில் துறையினரை சந்தித்து பிரதமர் மோடி பேச்சு
23 May 2022டோக்கியோ : இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறும், இந்தியாவில் முதலீடு செய்யக்கோரி ஜப்பான் தொழில் துறையினருடன் நேற்று பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
தைவான் மீது சீனா படையெடுத்தால் அந்நாட்டை பாதுகாக்க அமெரிக்கா களத்தில் இறங்கும் அதிபர் ஜோ பைடன் சூளுரை
23 May 2022தைவானை சீனா தாக்கினால், தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகளை அனுப்பும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.
-
கூட்டணி கட்சிகளால் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி பாதித்துள்ளது : தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி
23 May 2022சென்னை : தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் வளர்ச்சி பாதித்துள்ளது என்று தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழகத்தில் உருவான அரசியல் கூட
-
கோடை விடுமுறையில் வெளியூர் செல்ல மக்கள் ஆர்வம்: அரசு பஸ்களில் தினமும் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணம் : ஒரே வாரத்தில் இரு மடங்காக அதிகரித்த பயணிகள் எண்ணிக்கை
23 May 2022சென்னை : கோடை விடுமுறை தொடங்கியதை அடுத்து வெளியூர் மற்றும் சொந்த ஊர் செல்ல மக்கள் ஆர்வம் காட்டுவதால் அரசு விரைவு பேருந்துகளில் தினமும் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து ப
-
பெட்ரோல் வரி விகிதத்தில் சில விஷயங்களை மறைத்து பேசுகிறார் : அண்ணாமலை மீது செந்தில்பாலாஜி விமர்சனம்
23 May 2022கரூர் : பெட்ரோல் வரி விகிதத்தில் சில விஷயங்களை மறைத்தும் மறந்தும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். சிலருக்கு புரிதலும் இல்லை.
-
போதிய அளவில் மாணவர் சேர்க்கை இல்லாததால் வரும் கல்வி ஆண்டில் 10 தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள் மூடல் : அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
23 May 2022சென்னை : தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
-
குறுவை சாகுபடிக்கு 3.675 மெ.டன் விதைகள், 56,229 மெ.டன் உரங்கள் இருப்பு வைப்பு : உழவர் நலத்துறை அமைச்சகம் தகவல்
23 May 2022சென்னை : குறுவை சாகுபடி ஆயத்தப் பணிக்காக 3,675 மெட்ரிக் டன் விதைகளும், 56,229 மெட்ரிக் டன் ரசாயன உரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக உழவர் நலத் துறை அமைச்சகம் தெரிவித்
-
12 ஆண்டுகளுக்குப்பின் மே 26 முதல் மதுரை-தேனி ரயில் சேவை தொடக்கம்
23 May 2022மதுரை : 12 ஆண்டுகளுக்குப்பின் மே 26 முதல் மதுரை-தேனி இடையே ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதை அடுத்து மதுரை, தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.