முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் தலைமையில் அறநிலைத்துறை சீராய்வுக்கூட்டம்

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.16 - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் சீராய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் நடைபெற்று வரும் திருப்பணிகள், நலத்திட்ட பணிகள், கட்டுமான பணிகள் மற்றும் இதர துரை சார்ந்த பணிகள் ஆகியவற்றில் இத்துறை அலுவலர்களின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றம் குறித்த முதல் சீராய்வு கூட்டம் 15.6.11 அன்று செனஅனை, ஆணையர் அலுவலகத்தில், இந்து சமய அறிநிலையத்துறை அமைசச்ர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில், தமிழ் வளர்ச்சி அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை, அரசு செயலாளர், டி.என்.இராமநாதன், இந்து சமய அறிநிலையத்துறை ஆணையர் மு.கலைவாணன் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் தமிழகத்திலுள்ள திருக்கோயில்களில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், திருக்கோயில்களில் நடைபெறும் திருப்பணிகள் மற்றும் கட்டுமான பணிகள் குறித்த முன்னேற்ற விவரங்கள், திருத்தேர் திருப்பணிகள், திருக்குளங்கள் பராமரிப்பு, திருக்களுங்களில் மழைநீர் சேகரிப்பு, அன்னதானத்திட்டம், ஒருகாலபூசை திட்டம், திருக்கோயில் சொத்துக்களை பாதுகாத்தல், கருணை இல்லங்கள், திருக்கோயில்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் ஆகியவை குறித்து சீராய்வு செய்யப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இந்த கூட்டத்தில் கூடுதல் ஆணையர் (பொது), கூடுதல் ஆணையர் (விசாரணை), இணை ஆணையர் (திருப்பணி), இணை ஆணையர் (தலைமையிடம்), கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர், மண்டல இணை ஆணையர்கள், இணை ஆணையர், செயல் அலுவலர்கள், துணை ஆணையர், செயல் அலுவலர்கள், துணை ஆணையர், நகைசரிப்பார்ப்பு அலுவலர்கள், உதவி ஆணையர்கள், உதவி ஆணையர், செயல் அலுவலர்கள், உதவி ஆணையர், நகை சரிபார்ப்பு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்