முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானாவில் 1ம் தேதி ரயில் மறியல் போராட்டம் - சந்திரசேகரராவ்

சனிக்கிழமை, 26 பெப்ரவரி 2011      அரசியல்
Image Unavailable

 

நகரி, பிப்.27 - தெலுங்கானாவில் தனி மாநிலம் கோரி வருகிற 1ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று சந்திரசேகரராவ் தெரிவித்தார். ஆந்திராவை பிரித்து தநிமாநிலம் அமைக்க கோரி தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழு போராட்டம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் அமைப்பது குறித்து ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி ஆய்வு செய்து தாக்கல் செய்திருந்ததில் 6 அம்ச பரிந்துரைகள் இடம் பெற்றிருந்தது. ஆனால் தனி மாநிலம் அமைப்பது பற்றி உறுதியாக தெரியவில்லை. இதனை அடுத்து தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழு மாநிலம் தழுவிய போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறது. 48 மணி நேர முழு அடைப்பு போராட்டம், அரசு ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம், சட்டசபை முற்றுகை போராட்டம் போன்ற பல போராட்டங்களை நடத்தி வருகிறது. 

மேலும் ஐதராபாத்தில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், தெலுங்கானா கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தி விட்டோம். ஆநால் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே மத்திய அரசை தட்டி எழுப்பும் வகையில் வரும் 1ம் தேதியன்று தெலுகானா பகுதியில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். அன்றைய தினம் ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரண்டு மறியலில் ஈடுபடுவார்கள். 1ம் தேதியன்று பயணிகளும் பயணம் செய்வதை தவிர்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்