முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருத்தணியில் நீரில் மூழ்கி 4 குழந்தைகள் பலி

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருவள்ளூர்,ஜூன்.17 - திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கல்குவாரி அருகே உள்ள குளத்தில் ஒரே நேரத்தில் 4 குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி பலியாகின. இந்த துயர சம்பவம் கேட்டு கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ரமணா நேரில் சென்று ஆறுதல் கூறி நிதியுதவியும் வழங்கினார். அவருடன் அரக்கோணம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ரவியும் சென்றிருந்தார். 

திருத்தணி அருகே விண்டர்பேட்டையை சேர்ந்த ரவி, வாட்ச் ரிப்பேர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராணி. இவர்களுடைய 3 குழந்தைகள் ஸ்ரீதேவி, தினேஷ், சுவேதா. இவர்கள் 10 ம் வகுப்பு, 5 ம் வகுப்பு, 6 ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்களோடு பக்கத்து வீட்டு ஆரோக்கிய தாஸ் மகன் ராஜேஷ், அருகில் இருந்த கல்குவாரிக்கு சென்று ஆழம் தெரியாமல் தண்ணீரில் இறங்கியுள்ளனர். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி 4 பேரும் பலியானார்கள். 

தகவலறிந்த அரக்கோணம் எம்.எல்.ஏ ரவி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் இச்சம்பவம் அறிந்த ஜவுளித்துறை அமைச்சர் ரமணாவும் மருத்துவமனைக்கு சென்று இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தி பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். இறந்த குழந்தைகளின் பெற்றோருக்கு நிதியுதவியும் வழங்கினார். கல்குவாரியை பார்வையிட்டு மீண்டும் உயிரிழப்பு ஏற்படாமல் இருக்க குளத்தில் இருக்கும் நீரை வெளியேற்றவும் உத்தரவிட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago