முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புரட்சித்தலைவி பசுமை தமிழகம் சார்பில் உதவிகள் வழங்கும் விழா

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன், 17 - ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதல்வரானதையொட்டி ராமநாதபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புரட்சித்தலைவி பசுமை தமிழகம் சார்பில் நடைப்பெறுகிறது. இதுகுறித்து புரட்சித்தலைவி பசுமை தமிழகம் நிறுவனர் வி.என்.சுந்தர்ராஜர் கூறியதாவது:-

புரட்சித்தலைவி ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதல்வரானதையொட்டி பாராட்டு தெரிவிக்கும் வகையில், ராமநாதபுரத்தில் ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. 12-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு தொகையும், ஏழை, எளிய பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும். இந்த விழாவில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட நிர்வாகிகளும் மாநில அமைச்சர்கள், நடிகர்கள் ராதாரவி, செந்தில், நடிகை விந்தியா, சிங்கமுத்து ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். 

புரட்சித்தலைவி  மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றதையொட்டி ராமநாதபுரத்திலுள்ள கோவில்களிலும், சர்ச், மசூதி ஆகிய இடங்களில் சிறப்பு பூஜைகளும், பிராத்தனைகளும் நடைபெறும். இந்த விழா ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதன் அதிகார பூர்வமான தேதி முடிவு செய்து அறிவிக்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்