முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனில் தலிபான்கள் தாக்குதலில் 5 பேர் பலி

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத்,ஜூன்.18 - ஆப்கனில் வாழும் தலிபான் பயங்கரவாதிகள் பாகிஸ்தான் கிராமத்தில் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் பொதுமக்களில் 5 பேர் உயிரிழந்தனர். ஆப்கன் தலிபான்கள் கடந்த ஒரு மாதத்தில் நடத்தும் மூன்றாவது தாக்குதல் இதுவாகும். 

ஆப்கன் எல்லையை ஒட்டி அமைந்துள்ள பாகிஸ்தான் கிராமத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பெண்கள் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு ராணுவமும், துணை ராணுவப்படையினரும் உள்ளூர் போலீசாரும் விரைந்து சென்று பதில் தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர்கள் சிலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2008 ம் ஆண்டில் இருந்து இப்பகுதியில் தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த பிராந்தியத்தில் இருந்து அனைத்து தீவிரவாதிகளும் விரட்டியடிக்கப்பட்டு விட்டதாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்