முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.சி.ஐ.டி புதிய ஏ.டி.ஜி.யாக சேகர் நியமனம்

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.18 - சி.பி.சி.ஐ.டி.பிரிவின் புதிய ஏ.டி.ஜி.பி.யாக (காவல்துறை கூடுதல் தலைவர்) சேகர் நியமிக்கப்பட்டுள்ளார். சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.ஜி.அர்ச்சனா ராம சுந்தரம் உட்பட 7 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசின் உள்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சி.பி.சி.ஐ.டி ஏ.டி.ஜி.பி.யாக இருந்த அர்ச்சனா ராமசுந்தரம், அங்கிருந்து மாற்றப்பட்டு போலீஸ் பயிற்சி கல்லூரி ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியில் இருந்த சேகர், சி.பி.சி.ஐ.டி ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் கமிஷனராக இருந்த சுனில் குமார்சிங், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுளளார். அப்பதவியிலிருந்து ராஜேந்திரன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு புதிய பதவி வழங்கப்படவில்லை. குற்ற ஆவணக்காப்பகத்தின் ஐ.ஜி.யாக இருந்த சொக்கலிங்கம், சேலம் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி ஜெயபாலன், திருநெல்வேலி நகர குற்றப்பிரிவு எஸ்பி  அசோக்குமார், தி.நகர் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா பிறப்பித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்